நண்பரின் மனைவியைத் துப்பாக்கி முனையில் 4 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

“உலகம், இன்பத்துக்கு ஏங்கிக் கிடக்கு!” என்ற வரிகளுக்கு ஏற்பதன், தினம் தினம் புதிது புதிதாகப் பெண்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

Four youths sexual assault friend wife at gunpoint

பெண்களைப் போதைப் பொருளாகவே பார்க்கும் பார்வை, எள்ளவும் மாறவில்லை என்பதற்குச் சாட்சி சொல்கிறது இந்த பாலியல் பலாத்கார சம்பவம்.

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே அமைந்துள்ளது சிரோலி கிராமத்தைச் சேர்ந்த குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

இதனிடையே, குமார் தனது நண்பர்களைத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம். அப்போது, குமாரின் மனைவி மிகவும் அழகாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், குமாரின் நண்பர்கள் 4 பேருக்கும், குமாரின் மனைவி மீது ஒரே நேரத்தில் காமத் தீ பற்றி எரிந்துள்ளது. இதில், எப்படியாவது நண்பரின் மனைவியை அடைந்தே.. தீர வேண்டும் என்று, அவர்கள் 4 பேரும் ஏங்கித் தவித்துள்ளனர். பின்னர், 4 பேரும் சேர்ந்து திட்டம் போட்டனர்.

அதன்படி, குமாரின் குடிப்பழக்கத்தைப் பயன்படுத்திக்கொண்ட அவரது நண்பர்கள், அவரை அளவுக்கு அதிகமாகப் போதையாக்கி, அவரை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்க வைத்து, சிறைக்கு அனுப்பி விட்டனர்.

இதனால், குமாரின் மனைவி தனியாக வசித்து வந்துள்ளார். இதனால், திட்டம்போட்டு, நள்ளிரவு நேரத்தில் 4 பேரும் ஒன்றாகச் சேர்ந்து குமார் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

Four youths sexual assault friend wife at gunpoint

அங்கு, குமாரின் மனைவியைத் துப்பாக்கி முனையில் மிரட்டி, 4 பேரும் சேர்ந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

4 பேரிடமும், காமம் முழுமையாகத் தீர்ந்தபொழுது, அந்த பெண்ணை கொலை செய்யவும், அவர்கள் திட்டமிட்டனர். இதனால், சாமர்த்தியமாக யோசித்த அந்த பெண், அங்கிருந்தபடியே சத்தம் போட்டு, கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பதறி அடித்துக்கொண்டு ஓடிவந்துள்ளனர்.

இதனால், பயந்துபோன 4 பேரும், அங்கிருந்து ஓடியுள்ளனர். இதனையடுத்து, அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 4 பேரையும் வலை வீசி தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, நண்பரின் மனைவியை, 4 நண்பர்களே.. சேர்ந்து திட்டம்போட்டு, துப்பாக்கி முனையில் கூட்டு பலாத்காரம் செய்து, கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.