காதலால் பள்ளி மாணவியைக் கடத்திய இளைஞர், போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள  திருவிடைமருதூரைச் சேர்ந்த 24 வயதான ரூபன், அங்குள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

A guy arrested for allegedly raping his lover

அதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி திவ்யாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதல் மலர்ந்துள்ளது.

இதனையடுத்து, இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், வழக்கம் போல் கடந்த 20 ஆம் தேதி, பள்ளிக்குச் சென்ற திவ்யா, மாலை வீடு திரும்பவில்லை. திவ்யா பள்ளிக்கு வருவதாகக் கூறிவிட்டு, தனது காதலன் ரூபனுடன் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த திவ்யாவின் பெற்றோர், தன் மகளை ரூபன் கடத்திச் சென்றுவிட்டதாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

A guy arrested for allegedly raping his lover

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார், ரூபனின் செல்போனை அழைப்பை வைத்து, ரூபன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். 

பின்னர், 18 வயது நிரம்பாத சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி, ரூபனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், திருவிடைமருதூரில் பரபரப்பு ஏற்பட்டது.