காதலுக்குத் தூது சென்ற 15 வயது சிறுமியை, 17 வயது சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“அறியாத வயசு புரியாத மனசு
இரண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்” என்ற இளையராஜாவின் வரிகளுக்கு ஏற்பதன், வயதுக்கு வருவதற்கு முன்பே, காதல் என்னும் பெயரில் கற்பை, அறுவடை செய்துவிடுகிறார்கள். அறுவடை செய்யும் வயதில், களவு போனதை நினைத்துக் கலங்கித் தவிக்கிறார்கள். இதுவே, இச்சமுகத்தில் காதலென்னும் அத்துமீறல்கள்.

அந்த வகையைச் சேர்ந்த ஒரு வித அத்துமீறல் தான், தாராபுரத்தில் தற்போது நிகழ்ந்துள்ளது. 

Boy makes lovers friend pregnant in Dharapuram

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, ஏழ்மை காரணமாகப் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்து வந்தார்.

அவரது வீட்டின் அருகே உள்ள அவரது உறவுக்கார இளைஞன் 17 வயது சிறுவன், வேறொரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

அந்த சிறுவனின் காதலுக்கு, இந்த உறவுக்கார பெண்ணான, 15 வயது சிறுமியைத் தூது அனுப்பி உள்ளார். ஒரே ஒரு நாள் தூது சென்ற சிறுமியை, பின்னர் தினமும் தூது அனுப்பி உள்ளனர். 

Boy makes lovers friend pregnant in Dharapuram

ஒரு கட்டத்தில், காதலித்த பெண்ணை விட்டுவிட்டு, காதலுக்குத் தூது சென்ற சிறுமியின் மீது, அந்த சிறுவனுக்குக் கவனம் திரும்பி உள்ளது. சிறுமியின் வசிகரத்தில், கிரங்கிப்போனான் அந்த சிறுவன். ஆனால், சிறுமி மீது காதல் மலர்வதற்குப் பதிலாக, காமம் மலர்ந்துவிட்டது.

அந்த காமத்தை, அவன் எத்தனை நாளைக்குத் தான் அடக்கி வைக்க முடியும்?

காதலா அது, கண்ணியமாக நடந்துகொள்ள? காமம், அதனால்.. கட்டவிழ்த்துவிட சிறுவன் துணிந்தான்.

“பஞ்சையும், நெருப்பையும் பக்கத்தில் வைத்தது யார் செய்த வேலை?”

Boy makes lovers friend pregnant in Dharapuram

சம்பவத்தன்று சிறுவன், சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளான். அங்கு, சிறுமி மட்டும் தனியாக இருக்க, சிறுமியிடம் முதலில் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளான். ஆனால், சிறுமி பயப்படவே, அந்த பயத்தைப் பயன்படுத்தி, சிறுமியை மிரட்டியே மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

பின்னர், இதனை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளான். சிறுமியும் பயத்தில், இதை வெளியே சொல்லவில்லை. ஆனால், அவளது உடல் மொழிகள் மெல்ல மெல்லக் காட்டிக்கொடுத்துவிட்டது.

சில நாட்களில் சிறுமியின் அன்றாட செயல்பாடுகளில் பெரிய அளவில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு, சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 6 மாதம் கருவுற்று இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், யார் காரணம், என்ன நடந்தது? என்று கேள்விகளால் சிறுமியை துளைத்து எடுத்துள்ளனர்.

பின்னர், வேறு வழியில்லாமல் தனக்கு நேர்ந்த “காமவேட்டை” பற்றி அழுதபடியே சிறுமி கூறி, கதறி உள்ளார்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள், அங்குள்ள தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதனால், தாராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.