முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெற்றி வியூகத்தால் ஏற்பட்ட தே.மு.தி.கவின் கூட்டணி வெளியேற்றம் அ.தி.மு.கவிற்கு தேர்தல் களத்தில் சாதகமான சூழலையே ஏற்படுத்தியுள்ளது என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. முதன் முதலில் பா.ம.கவுடன் இடங்களை உறுதி செய்து பின்னர் முதல் வேட்பாளர் பட்டியலையும் அறிவித்து விட்டது. 


தொகுதி உடன்பாடு ஏற்பாடத நிலையில் தே.மு.தி.க கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தன்னிச்சையாக அறிவித்தது. பிடிவாத நிலை காரணமாக தே.மு.தி.க கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தன்னிச்சையாக அறிவித்தது. இது 2011ஆம் ஆண்டு இல்லை என்று தே.மு.தி.கவிற்கு எடப்பாடி பழனிசாமி உணர்த்தியுள்ளார் என்று அதிமுகவினரால் விமர்ச்சிக்கப்படுகிறது. 


மேலும் அதிருப்தியோடு தான் தி.மு.க கூட்டணியில் பிற கட்சிகளின் தொகுதி பங்கீடு பேசி முடிக்கப்பட்டது.தேசிய கட்சியான காங்கிரஸ்க்கு மாநிலத் தலைவர் கண்ணீர்விட்ட பிறகுதான் வேறு வழியின்றி காங்கிரஸ்க்கு 25 சீட்டுகளை ஒதுக்கியது தி.மு.க.


நீண்ட இழுபறிக்கு பின்னரே சி.பி.ஐ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை முடித்தது தி.மு.க. தலா 6 இடங்கள் என்ற அடிப்படையில் தி.மு.க பேச்சு வார்த்தையில் முடிவுக்கு வந்தது சி.பி.எம்யை கோபத்தில் ஆழ்த்தியது. பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பின் வேறு வழியின்றி சி.பி.எம்வுடன் 6 இடங்கள் என்று முடிவு செய்யப்பட்டது.


இப்படியாக கூட்டணி கட்சிகளுடனான தி.மு.க.வின் தொகுதி பங்கீடுகள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக அதிமுக வட்டாரங்களால் கூறப்படுகிறது.