வரதட்சணை கொடுமையின் உச்சபட்சமாக, தனது மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கணவனே கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் அமுதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பவருக்கும், அங்குள்ள பசேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பவருக்கும் இடையே, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு முறைப்படி திருமணம் நடந்து உள்ளது. 

திருமணத்துக்குப் பிறகு, கணவர் வீட்டிற்கு வந்த அந்த பெண்ணை, அவரது கணவரும், கணவனின் குடும்பத்தினரும் சேர்ந்து இன்னும் கூடுதலான வரதட்சணை கேட்டுத் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்து உள்ளனர்.

ஆனால், அந்த பெண்ணின் பெற்றோர் ஏழை குடும்பத்தினர் என்பதால், மாப்பிள்ளை வீட்டில் கேட்ட கூடுதலான வரதட்சணை தர இயலாது என்பதைத் தெரிந்து கொண்ட சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் புது பெண் அமுதாவை கொடுமைப் படுத்த தொடங்கி உள்ளனர். அத்துடன், அந்த புது பெண்ணையும், அவரது பெற்றோரையும் பழிவாங்க முடிவு செய்தனர்.

அதன் படி, ஒரு விபரீத முயற்சியையும் அவர் எடுத்தார். கடந்த 27 ஆம் தேதி சனிக் கிழமை அன்று கணவன் சரவணன், அவருடைய நண்பர் ஒருவரை வீட்டிற்குக் கூட்டி வந்து அவரது மனைவியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், மறுநாள் சுதாரிப்பதற்குள் மறுநாள் அவருடைய மற்றொரு நண்பரைக் கூட்டி வந்து, மீண்டும் அவரது மனைவியை அவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

முக்கியமாக, கணவனும் அவரது நண்பரும் அந்த பெண்ணின் பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடியைத் தூவி மிக கொடூரமான முறையில் டார்ச்சர் செய்து உள்ளனர்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனக்கு நேரும் கொடுமைகள் தொடர்பாகத் தனது பெற்றோருக்குத் தகவல் கூறியுள்ளார். இதனால், கடும்  அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர்கள், நேராக அங்கு சென்று, அந்த பெண்ணை மீட்டு, இந்த கொடுமைகள் தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு தற்போது அனுப்பி வைத்து உள்ளனர்.

மேலும், அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது தலைமறைவாகி உள்ளனர். எனினும், அவர்களைக் கைது செய்யும் முனைப்பில் போலீசர் அவர்களைத் தொடர்ந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.