திருட்டில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள்.. சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!

திருட்டில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள்.. சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு! - Daily news

சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரு பள்ளி மாணவர்களை போலீசார் பிரித்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

சென்னை பட்டினம்பாக்கம் பவானிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் அவரது வயது 25. இவர் கடந்த 10-ம் தேதி அன்று இரவு 11.15 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை அருகே செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மொபட் வாகனத்தில் வந்த 2 பேர் அவருடைய செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் ராஜசேகர் சுதாரித்துக் கொண்டதால் அவரது செல்போன் தப்பியது.

இந்நிலையில் செல்போன் பறிப்பு முயற்சி தோல்வியில் முடிந்ததால் அந்த 2 பேரும் ராஜசேகருக்கு கொலைமிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். இதுகுறித்து ராஜசேகர், அண்ணாசதுக்கம் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காமேஸ்வரி வழக்குப்பதிவு செய்தார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விசாரித்ததில் ராஜசேகரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட முயற்சி செய்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது ராயபுரத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவனும், பெசன்ட் நகரில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவனும் என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்தனர்.  விசாரணையின்போது இவர்கள் 2 பேரும் அடையாறு பகுதியில் ஒருவரிடம் செல்போன் பறித்து தப்பியதும் தெரிய வந்தது. விசாரணைக்கு பின்னர் பள்ளி மாணவர்கள் 2 பேரும் கெல்லீசில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். 

சமீப காலமாக சிறுவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது, மற்றும் திருட்டில் ஈடுபடுவது அதிகமாகிவருகிறது. இதனை தடுக்க பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் மீது அதிக கவனத்துடனும் தேவையான கண்டிப்புடனும் இருக்க வேண்டும்.


 

Leave a Comment