ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்!

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்! - Daily news

விருதுநகரில் காதலி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதால் வேதனையில் இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் அடுத்துள்ள எம்.ராமசாமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகள் சோலைமீனா வயது 20. இவர் விருதுநகரில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும், பகுதி நேரமாக கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையில் செலிவியராகவும் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், சோலை மீனா, சாத்தூரை அடுத்த சிறுகுளத்தை சேர்ந்த எலெக்ட்ரீசியன் பிரவீன்குமார் வயது 21 என்பவரை காதலித்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை சோலைமீனா இரவு பணிக்கு சென்றிருந்தார். அப்போது, காதல் விவகாரம் தொடர்பாக அவருக்கும், உடன் பணிபுரியும் 2 பெண்கள் உள்பட மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. 

இந்நிலையில் இதனால் வேதனையடைந்த சோலைமீனா, நேற்று காலை பட்டம்புதூர் பகுதியில் திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற இன்டர்சிட்டி விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி ரயில்வே போலீசார், சோலைமீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதனிடையே, சோலைமீனா தற்கொலை செய்துகொண்ட செய்தியை கேள்விபட்டு அதிர்ச்சியடைந்த பிரவீன்குமார், விருதுநகர் வேலுச்சாமி நகர் பகுதியில் சென்னைக்கு சென்றுகொண்டிருந்த குருவாயூர் விரைவு ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

அதனைத்தொடர்ந்து  இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, விருதுநகர் ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வீசராணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Comment