மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் மர்மமான முறையில் இறப்பு!

மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் மர்மமான முறையில் இறப்பு! - Daily news

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் உதயசூரியன் - புவனேஷ்வரி தம்பதியினர். இவர்களது மகள் சுகன்யா வயது 29. இவர் மன வளர்ச்சி குன்றியவர் ஆவார். இந்த நிலையில், நேற்று மதியம் சுகன்யா கோவிலுக்கு அன்னதானம் சாப்பிட செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால், நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் சுகன்யா எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மேலும் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. 

இந்நிலையில் சுதந்திரபுரம் பகுதியில் உள்ள முந்திரிக்காட்டில் பெண்ணின் சடலம் கிடப்பதாக, சாக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரித்தபோது அது சுகன்யா என தெரியவந்தது. மேலும் அவரது ஆடைகள் கிழிந்த நிலையில் காணப்பட்டதால், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. 

மேலும் அதனைத்தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இதனிடையே, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் புதுவயல் - அறந்தாங்கி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Comment