தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும், சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் திகழும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேப்பாக்கம் தொகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வான நிலையில், தற்போது தமிழ் நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்று சிறப்பாக பணியாற்று வருகிறார். சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் நேர்த்தியாக பணியாற்றி வந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு முற்றிலும் சினிமாவில் இருந்து விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட இருப்பதாக அறிவித்திருந்தார். நடிகராக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில், பாலிவுட்ல் சூப்பர் ஹிட்டான ஆர்டிகள் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான நெஞ்சுக்கு நீதி மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் படமாக வெளிவந்த கலகத் தலைவன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் ஆகின.

முன்னதாக தனது கடைசி படம் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்த மாமன்னன் திரைப்படத்தை பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய படங்களின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் தயாரித்து நடித்துள்ள மாமன்னன் படத்தில் வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் பாஸில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கும் மாமன்னன் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன விரைவில் மாமன்னன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அருள்நிதி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கண்ணை நம்பாதே. LIPI CINE CRAFTS தயாரிப்பில் உருவாகி இருக்கும் கண்ணை நம்பாதே திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து நடிகை ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா சாவ்லா, வசுந்தரா கஸ்யப், சதீஷ், மாரிமுத்து, சுபிக்ஷா கிருஷ்ணன், பழ.கருப்பையா, சென்ராயன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவில் சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ள கண்ணை நம்பாதே திரைப்படத்திற்கு சித்து குமார் இசை அமைத்துள்ளார்.ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் கண்ணை நம்பாதே திரைப்படம் வருகிற மார்ச் 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு கண்ணை நம்பாதே படக் குழுவினர் சிறப்பு பேட்டி கொடுத்தனர். இந்த பேட்டியில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா மற்றும் இயக்குனர் மு.மாறன் ஆகியோர் கலந்து கொண்டு பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் போட்டிருக்கும் டாட்டூக்கள் குறித்து நாம் கேட்ட கேள்விக்கு அந்த டாட்டூக்கள் எப்போது எந்த சமயத்தில் போடப்பட்டது. அந்த டாட்டூக்களில் இருக்கும் விஷயம் என்ன என்பதை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார். அப்போது கடைசியாக, “உங்களது டாட்டூக்களை DECODE செய்துவிட்டோம்” என நாம் சொன்ன போது, “ஏதோ பெரிய வெற்றிமாறன் படம் மாதிரி DECODE பண்றீங்க” என கலகலப்பாக உதயநிதி ஸ்டாலின் பேசினார். கலக்கலான அந்த முழு பேட்டி இதோ…