உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகிகளில் ஒருவருமான நடிகை ஸ்ருதிஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவின் மிக முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக திகழ்கிறார். கடைசியாக தமிழில் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் திரைப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்திருந்தார். தொடரந்து தெலுங்கில் நட்சத்திர நடிகர்களாக திகழும் நந்தாமுரி பாலகிருஷ்ணா மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோரின் நடிப்பில் கடைசியாக கடந்த பொங்கல் வெளியீடாக ரிலீஸான வீர சிம்ம ரெட்டி மற்றும் வால்டர் வீரய்யா ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடிகை ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அடுத்ததாக இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாக வசூல் சாதனை படைத்த கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் சலார் படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனிடைய தற்போது ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் THE EYE எனும் ஆங்கில திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். முன்னதாக நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த சில ஆண்டுகளாக சாந்தனு ஹசாரிக்கா எனும் புகழ்மிக்க ஓவியக் கலைஞரை காதலித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு சிறப்பு பேட்டி கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும்போது, “வாழ்க்கையில் தந்தையைத் தாண்டி மற்றொரு நபர் நம் வாழ்க்கை முழுவதும் இருக்கப் போகிறவர் நம் வாழ்க்கை துணை தான். எனவே சாந்தனு அவர்கள் பற்றி சொல்லுங்களேன் அவர் எவ்வளவு உறுதுணையாக இருக்கிறார்?” எனக் கேட்டபோது, “அவர் மிக மிக உறுதுணையான ஒரு மனிதர்... இயல்பாகவே பெண்களை மதிப்பவர். அவருடைய தாயார் மற்றும் சகோதரிகளால் அவர் அப்படி இருப்பதால் நானும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். மேலும் அந்த ஒரு புரிதல் அவருக்கு ஏற்கனவே இருப்பதால்... மேலும் அவர் ஒரு கலைத்துவமான மனிதர்... அவருடைய துறையில் மிகப்பெரிய பாதை வகுத்தவர். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். மிகவும் அன்பானவர். மிகவும் புத்திசாலி. ஆனால் அந்த புத்திசாலித்தனம் மொத்தமும் எப்போதுமே நல்ல விஷயங்களுக்கு மட்டும் தான்.” என பதில் அளித்துள்ள ஸ்ருதிஹாசனின் சுவாரசியமான அந்த முழு பேட்டி இதோ…