“சீரியஸான காட்சியில் சமந்தா பாடலுக்கு vibe பண்ணிட்டு இருந்தார்” படப்பிடிப்பில் பாரதிராஜா செய்த சேட்டைகள் குறித்து படக்குழுவினர் – கலகலப்பான நேர்காணல் இதோ..

திருவின் குரல் படப்பிடிப்பில் பாரதி ராஜா படக்குழுவினர் பகிர்ந்த தகவல் – Bharathiraja atrocity in Thiruvin kural shooting | Galatta

இந்த ஆண்டு அட்டகாசமான படங்களின் வரிசையில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் அருள்நிதியின் ‘திருவின் குரல்’. மிரட்டலான கிரைம் திரில்லர் கதைகளத்துடன் குடும்ப உணர்வுகளை பற்றி பேசும் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் அருள் நிதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் இமையம் பாரதி ராஜா நடித்துள்ளார். மேலும் படத்தில் நாயகியாக ஆத்மிகா நடித்துள்ளார். இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வரும் எப்ரல் மாதம் 14 ம் தேதி வெளியிடவுள்ளது. இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் திருவின் குரல் குறித்து நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் படத்தின் நாயகன் அருள்நிதி, நாயகி ஆத்மிகா மற்றும் இயக்குனர் ஹரிஷ் பிரபு ஆகியோர் கலந்துகொண்டு படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதில் படப்பிடிப்பில் பாரதி ராஜா செய்த சேட்டைகள் குறித்து படக்குழுவினர் கூறியது,

"அருள்நிதி சார் நடந்து வந்து பாரதிராஜா சார் உள்ளே படுத்திட்டு இருப்பார். அந்த காட்சி ரொம்ப சீரியஸான காட்சி.. ரொம்ப அமைதியா இருந்தது படப்பிடிப்பு தளம். நான் ஆக்ஷன் சொன்னது சார் நடந்து வந்து நடிச்சிட்டு இருக்கார். அப்போ புஷ்பா படம் நல்ல டிரெண்டிங்கில் இருந்தது. யாரோ புஷ்பா பட பாடலை கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கு செம்ம கோவம்.. யாருனு தேடுறேன். அங்க போய் பார்த்தா பாரதி ராஜா சார் சமந்தா சாங் போட்டு டான்ஸ் ஆடிட்டு இருக்கார். நான் என்ன சார் இந்த நேரத்தில் கேட்டேன்  அதற்கு 'ஸ்டெப் சூப்பரா இருக்குடானு சொன்னார்." என்றார் இயக்குனர் ஹரிஷ் பிரபு.

"அதே மாதிரி மான்டேஜ் காட்சிகள் எனக்கும் அவருக்கும் இருக்கும். அப்போ என்னிடம் 'என்ன அனுப்ப சொல்லுடா, அனுப்ப மாட்டேங்குறான்' னு அத பேசுவார். எனக்கு பதிலுக்கு பேச முடியாது." என்றார் நடிகர் அருள்நிதி மேலும் தொடர்ந்து நடிகை ஆத்மிகா " ஒரு முக்கியமான காட்சி காரைக்கால் மருத்துவமணையில் அந்த காட்சி எடுத்துட்டு இருந்தோம். அந்த காட்சியில் பாரதி ராஜா சார் படுத்திட்டு இருக்கனும். ரொம்ப சீரியஸான சீன் அது..  அந்த காட்சியில் பாரதிராஜா சார் அமைதியா படுத்துட்டு கால் மட்டும் ஆட்டிட்டு இருக்காரு. யாருக்கும் தெரியாது. யாரோ ஒருத்தர் அதை குறிப்பிட்டு சொன்னார்.என்ன சார் னு கேட்டதுக்கு அப்படியா பா.. சரி இன்னொரு முறை போயிடலாம் னு சொன்னார்  அவர் அந்த மாதிரி தான். அவர்தான் எங்கள் சிரிக்க வெச்சிட்டு இருந்தார்." என்றார் நடிகை ஆத்மிகா

மேலும் திருவின் குரல் படக்குழுவினர் படம் குறித்து சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

சினிமா

"Red Giant என் படத்தை வாங்காதது காரணம் இதுதான்.." அருள்நிதி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. - முழு வீடியோ இதோ..

மிரட்டலான தோற்றத்தில் பிரித்விராஜ்... ஆஸ்கார் பிரபலங்கள் ஒன்றிணையும் ‘ஆடுஜீவிதம்’ – உலகதரத்தில் அட்டகாசமான டிரைலர் இதோ..
சினிமா

மிரட்டலான தோற்றத்தில் பிரித்விராஜ்... ஆஸ்கார் பிரபலங்கள் ஒன்றிணையும் ‘ஆடுஜீவிதம்’ – உலகதரத்தில் அட்டகாசமான டிரைலர் இதோ..

“வெற்றிமாறன் தமிழ் திரையுலகின் பெருமை” விடுதலை படம் பார்த்து வியந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“வெற்றிமாறன் தமிழ் திரையுலகின் பெருமை” விடுதலை படம் பார்த்து வியந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. – வைரலாகும் பதிவு இதோ..