காலம் கடந்தும் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொலைக்காட்சி தொடர்களில் முக்கியமான தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி. சுமார் 3 சீசன்களாக எடுக்கப்பட்டு ஆயிரக்கணக்கான எபிசோடுகளை கொண்டு பல ஆண்டுகளாக மக்கள் மனதை கவர்ந்த தொடராக இருந்து வந்தவை சரவணன் மீனாட்சி. இன்றும் மறு ஒளிப்பரப்பு செய்தால் இந்த தொடரை பார்க்கவே பல ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் கதையை மையப்படுத்தி உருவான இந்த தொடர் அனைத்து தரப்பு வயதினரின் கவனத்தையும் ஈர்த்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதில் முதல் சீசனில் சரவணன் மீனாட்சியாக நடித்தவர்கள் மிர்ச்சி செந்தில் – ஸ்ரீஜா. ஏற்கனவே மதுர என்ற தொடரில் வரவேற்பை பெற்ற இந்த ஜோடிகள் தொடர்ந்து சரவணன் மீனாட்சி மூலம் மிகப்பெரிய அளவு பேசப்பட்டனர். இருவரின் கெமிஸ்ட்ரியும் எபிசோடுக்கு எபிசொட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் பின்னர் இருவரும் ‘மாப்பிள்ளை’ என்ற தொடரிலும் நடித்து கவனம் ஈர்த்தனர். மிர்ச்சி செந்தில் சரவணன் மீனாட்சி தொடருக்கும் முன்பிலிருந்தே திரைப்படங்கள் மற்றும் வானொலி நிலையத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.

ரீல் ஜோடியாக ரசிகர்களின் மனதை கவர்ந்த செந்தில் ஸ்ரீஜா கடந்த 2014 ல் திருமணம் செய்து கொண்டனர். இருவரது திருமண வாழ்விற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவு கொண்டாடி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். திருமணத்திற்கு பிறகு ஸ்ரீஜா பெரிதளவு சீரியல்களில் நடிப்பதில் இருந்து விலகி உள்ளார். செந்தில் இன்றும் பல நிகழ்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்து ரசிகர்களின் பிடித்த சின்னத்திரை நடிகராக வலம் வருகிறார். இந்த தம்பதியினருக்கு சுமார் 8 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது செந்தில் ஸ்ரீஜா தம்பதி தங்கள் 9 ம் ஆண்டு திருமண ஆண்டை சமீபத்தில் கொண்டாடினர். இது குறித்து மிர்ச்சி செந்தில் அவரது இன்ஸ்டாகிராமில் ஸ்ரீஜா மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்துள்ளார்.

அதனுடன், “இந்த 9ம் ஆண்டு திருமண விழாவில் எங்களுக்கு அற்புதமான பரிசு கிடைத்துள்ளது. உங்கள் அன்பிற்கு வாழ்த்துகளுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து செந்தில் பதிவு இணையத்தில் ரசிகர்களின் வாழ்த்துகளுடன் வைரலாகி வருகிறது.