இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சியான் விக்ரம் தொடர்ந்து அட்டகாசமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் . அதன்படி கடந்த ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த மகான் திரைப்படம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடபட்டு வருகிறது, அதே நேரத்தில் இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் அட்டகாசமான நடிப்பினை வெளிபடுத்தி மக்களின் பெருவாரியான பாராட்டுகளை சியான் விக்ரம் கடந்த ஆண்டு பெற்றார். அதனை தொடர்ந்து தற்போது சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் ;தங்கலான்’. கோளார் தங்க வயல் சார்ந்து பிரிட்டிஷ் காலக் கட்டத்தில் அட்டகாசமான திரைக்கதையில் இயக்குனர் பா ரஞ்சித் இப்படத்தை இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இப்படத்தில் சியான் விக்ரம் அவர்களுடன் இணைந்து பார்வதி, மாளவிகா, பசுபதி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார், கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து வரும் நிலையில் தங்கலான் படத்தை இந்த ஆண்டு இறுதியில் பான் இந்திய அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சியான் விக்ரமின் தங்கலான் திரைப்படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் தனன்ஜெயன் அவர்கள் நமது கலாட்டா தமிழ் பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் பேசியது.

"தங்கலான் கண்டிப்பா பா ரஞ்சித் சாருக்கு அடுத்த கட்டம். அவர் சார்பட்டா படத்திலே அவர் எவ்ளோ பெரிய இயக்குனருனு நிருபித்து விட்டார். அவரால ஒரு காலக்கட்டத்தை ரொம்ப அழகா பிரதிபலிக்க முடியும். அவர் மும்முரமாக இப்போ கேஜிஎப் ல படப்பிடிப்பு நடத்தி கொண்டு வருகிறார். அந்த படம் அவருடைய கனவு படம் மாதிரி.. தங்கலான் திரைப்படம் ஒரு பெரிய காலக்கட்டத்தையே காட்டுது.. 1817 ல ஆரம்பித்து 1940 ஆண்டு வரைக்கும் அந்த படத்தில் காட்டிருக்கிறார். கேஜிஎப் எப்படி உருவானது அதில் தங்கலான் அவர்களுடயை வாழ்கை என்ன? அப்படி னு ஒரு வாழ்கையே காட்ட விருக்கிறார்." என்றார்.

மேலும் அதை தொடர்ந்து அவர் சியான் விக்ரம் உருவாகி நீண்ட நாட்கள் வெளியாகாமல் இருக்கும் துருவ நட்சத்திரம் படம் குறித்து பேசுகையில்,

“துருவ நட்சத்திரம் திரைப்படம் படப்பிடிப்பு எல்லாம் முடிந்துவிட்டது. எடிட்டிங் வரைக்கும் எல்லாம் முடிந்தது‌ இப்போ சின்ன சின்ன வியாபார சிக்கல் மட்டும் தான் உள்ளது. அது முடிந்ததும் அந்த படம் வந்துவிடும். எனக்கு தெரிந்து அந்த படம் தங்கலான் படத்திற்கு பிறகு தான் வரும். ஏனென்றால் தங்கலான் படத்திற்கு மிகப்பெரிய மார்கெட் விக்ரம் சாருக்கு கிடைக்கும். தங்கலான் படம் கண்டிப்பா கெரியர் பெஸ்ட் படமா விக்ரம் சாருக்கு இருக்கும். “ என்றார் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

மேலும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் வரும் தமிழ் சினிமாமுக்கிய திரைப்படங்கள் குறித்து பல அட்டகாசமான தகவல்களை நமது கலாட்டா தமிழ் பேட்டியில் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..