தன்னைப் பற்றி பரவும் வதந்திகள் அனைத்திற்கும் விளக்கமளித்து நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது பதில் அளித்திருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் பிரபல இளம் கதாநாயகியாக வளர்ந்து வருபவர் நடிகை க்ரித்தி ஷெட்டி. கடந்த 2019 ஆம் ஆண்டு பாலிவுட்ல் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த சூப்பர் 30 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான நடிகை க்ரித்தி ஷெட்டி அடுத்து 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த உப்பண்ணா திரைப்படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார். இந்த உப்பண்ணா திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நடிகர் நானி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஷியாம் சிங்காராய் படத்தில் கதாநாயகியாக நடித்த க்ரித்தி ஷெட்டி, தொடர்ந்து நாகார்ஜுனா மற்றும் நாக சைதன்யா இணைந்து நடித்த பங்காருராஜு படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

கடந்த 2022ம் ஆண்டில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் போத்தினேனி கதாநாயகனாக நடித்த தி வாரியர், நடிகர் நித்தினின் மச்செரலா நியோஜவர்கம் மற்றும் சுதிர் பாபுவின் ஆ அம்மாயி குறிஞ்சி மீக்கு செப்பாலி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த க்ரித்தி செட்டி கடைசியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க சமீபத்தில் ரிலீசான கஸ்டடி படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். தொடரந்து அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்களில் நடித்து வருகிறார் க்ரித்தி செட்டி. அந்த வகையில் மலையாளத்தில் நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் பீரியட் ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அஜயண்டே ரண்டாம் மோக்ஷணம் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் க்ரித்தி ஷெட்டி அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜீனி படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். ஜெயம் ரவியுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், வமிக்கா கேபி மற்றும் க்ரித்தி ஷெட்டி ஆகியோர் இணைந்து நடிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த ஜீனி திரைப்படத்தை அறிமுக இயக்குனர் அர்ஜுனன்Jr இயக்குகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது 25வது திரைப்படமாக உருவாக்கும் இந்த ஜீனி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஓரிரு தினங்களுக்கு முன்பு பூஜை உடன் தொடங்கியது.

இதனிடையே கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேட்டியில் பேசிய க்ரித்தி ஷெட்டி, “நட்சத்திர நடிகர் ஒருவரின் மகன் தன்னிடம் மிகவும் தவறாக நடந்து கொள்கிறார் என்றும், அவர் செல்லும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொண்டு தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்வதாகவும், தன்னோடு நட்போடு பழக கடுமையாக முயற்சி செய்வதாகவும் அது நடிகை தனக்கு பிடிக்கவில்லை என்றும்” தெரிவித்திருப்பதாக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இதனை குறிப்பிட்டு விளக்கம் அளித்த நடிகை க்ரித்தி ஷெட்டி, “தயவு செய்து கதைகள் கட்டுவதையும் தவறான தகவல்கள் பரப்புவதையும் நிறுத்துங்கள். அடித்தளமே இல்லாத இந்த வதந்தியை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இது பெரிதாக வெடிக்கிறது” என் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று நடிகை க்ரித்தி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். அவரது அந்த விளக்கம் இதோ…