இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் திரைப்படம் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’. கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் மற்றும் நீலம் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றது. இப்படத்தில் நடிகர் சியான் விக்ரம் கதாநாயகனாகவும் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடைபெறும் இப்படத்தயை பா ரஞ்சித் உடன் இணைந்து எழுதியுள்ளார் எழுத்தாளர் தமிழ் பிரபா. இவர் இதற்கு முன்பு பா ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா படத்தொகுப்பு செய்ய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார்.
பா ரஞ்சித் சமகால தமிழ் திரையுலகின் மிக முக்கியமான இளம் இயக்குனர். குறுகிய காலத்திலே மிகப்பெரிய நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உடன் இரண்டு படங்களில் பணியாற்றியுள்ளார். தனித்துவமான கதையில் சமூக பிரச்சனையை பேசும் ரஞ்சித்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘அட்டகத்தி’ படம் தொடங்கி முந்தைய திரைப்படமாக வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் வரை ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் இயக்குனர் பா ரஞ்சித். அதன் படி தற்போது மக்கள் சார்ந்தும் காலம் கடந்த கதைகளத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்திற்கும் தனி எதிர்பார்ப்பு எழுந்துள்ளார். நிச்சயம் இந்த திரைப்படம் இந்திய அளவு கவனம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.