நடிகர் விஷ்ணு விஷால் இருக்கும் அவரது குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்காக வந்த மீட்பு பணிகளில் அஜித்குமார் உதவி இருக்கிறார் இதனை அறிவிக்கும் வகையில் அஜித்குமார் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர் கான் உடன் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு நடிகர் விஷ்ணு விஷால் முக்கிய பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அந்தப் பதிவில், “ஒரு பொதுவான நண்பர் மூலம் எங்கள் நிலைமையை அறிந்த பிறகு,
எப்பொழுதும் உதவும் மனப்பான்மை கொண்ட அஜித் சார் எங்களைப் பார்க்க வந்து எங்கள் வில்லா கம்யூனிட்டி உறுப்பினர்களுக்கான பயண ஏற்பாடுகளுக்கு உதவினார்... லவ் யூ அஜித் சார்!”
என குறிப்பிட்டு இருக்கிறார். அஜித்குமார், ஆமீர்கான் மற்றும் விஷ்ணு விஷால் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…

ஒட்டுமொத்த சென்னையையும் உலுக்கி இருக்கும் மிக்சாங் புயலின் சீற்றத்தில் இருந்து மொத்த நகரமும் புற நகரமும் பழைய நிலைக்கு திரும்புவது மிகுந்த சவாலான காரியமாக மாறி இருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கனமழையை காட்டிலும் அதிக அளவில் தற்போது மழை கொட்டி தீர்த்திருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் வெள்ளப் பெருக்காக மாறி வீடுகளுக்குள் புகுந்துள்ளது அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷ்ணு விஷால் குடியிருக்கும் குடியிருப்பு பகுதி முற்றிலும் நீரால் சூழ்ந்தது. காரப்பாக்கம் பகுதியில் குடியிருக்கும் விஷ்ணு விஷாலின் குடியிருப்பு பகுதியில் 30க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். அந்த மொத்த பகுதியையும் கனமழையின் காரணமாக வெள்ளம் சூழ்ந்தது இது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது X பக்கத்தில்,

“எனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து காரப்பாக்கத்தில் மட்டம் மிக மோசமாக உயர்ந்து வருகிறது. உதவிக்கு அழைத்துள்ளேன். மின்சாரம் இல்லை வைஃபை இல்லை. போன் சிக்னல் இல்லை. ஒன்றுமில்லை… ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொட்டை மாடியில் மட்டுமே எனக்கு சில சிக்னல் கிடைக்கிறது. எனக்கும் இங்குள்ள பலருக்கும் ஏதாவது உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம்❤️. சென்னை முழுவதும் உள்ள மக்களின் நிலையை என்னால் உணர முடிகிறது.” என பதிவிட்டிருந்தார். இதனை அடுத்து சில மணி நேரங்களிலேயே அங்கே மீட்பு படையினர் வந்து சேர்ந்துள்ளனர். இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகர் அமீர் கான் அவர்களும் நடிகர் விஷ்ணு விஷால் உடன் இணைந்து இருந்தார் இது பற்றி நடிகர் விஷ்ணு விஷால் புகைப்படங்களோடு, “சிக்கித் தவிக்கும் எங்களைப் போன்ற மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நன்றி… காரப்பாக்கத்தில் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே 3 படகுகள் இயங்குவதை பார்த்தேன். இதுபோன்ற சோதனையான காலங்களில் தமிழக அரசின் சிறப்பான பணி. அயராது உழைக்கும் அனைத்து நிர்வாக மக்களுக்கும் நன்றி…” என பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து தங்களை பாதுகாப்பாக வெளியேற்றிய மீட்புக் குழுவினருக்கு நன்றி தெரிவித்து, “எங்கள் வில்லா சமூகத்திலிருந்து 30 க்கும் மேற்பட்டவர்கள் பல வயதானவர்களுடன் வெளியேற்றப்பட்டனர். எங்கள் அனைவருக்கும் உதவிய மற்றும் காரப்பாக்கத்தில் மற்றவர்களுக்கு உதவிய தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி… எங்களிடம் இருந்த உணவை அவர்களுக்குக் கொடுத்தோம். தயவு செய்து இவர்களுக்கும் உதவுங்கள் ..அவர்கள் இடைவிடாமல் உழைத்து, அதிக உடல் உழைப்புடன் முடிந்தவரை பலரைச் சென்றடைகிறார்கள்…” என்றும் நடிகர் விஷ்ணு விஷால் பகிர்ந்து இருக்கிறார்.