காதலர் தினத்தில் கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசம் அனுபவித்ததைப் பார்த்த கணவன், கொலைவெறியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'காதலர் தினத்தில்' அரங்கேறிய கள்ளக் காதல் கதை இது!

“கள்ளக் காதலைக்கூட, 'காதலர் தினத்தில்' கள்ளத் தனமான காதலர்கள் கொண்டாடும் அளவுக்கு நாகரிகம் வளர்ந்துவிட்டதா? இல்லை, மனிதர்களின் எண்ணங்கள், தரம் தாழ்ந்துவிட்டதா?”

சேலம் மாவட்டம் நடுவலூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் - பிரியா தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரைக்கும், பிரியாவுக்கும் கடந்த ஒரு வருடமாக நெருக்கமான பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இதன் காரணமாக, பிரியா கோபப்பட்டு, கடந்த மாதம் தனது அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார். பின்னர், இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்ற நிலையில், கணவன் - மனைவி இருவரையும் அழைத்து போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே, அடுத்த சில வாரங்களில்.. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 'காதலர் தினம்' வந்த நிலையில், அன்று மனைவி பிரியாவை வெகு நேரமாக வீட்டில் காணவில்லை. இதனால், கணவன் வீட்டில் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், அவரது அம்மா வீட்டிற்கும் சென்று பார்த்துள்ளார். ஆனால், மனைவி அங்கும் இல்லை.

இதனால், சந்தேகமடைந்த கணவன், மனைவியிடம் நெருக்கமாகப் பழகி வந்த சின்னத்துரை வீட்டிற்குச் சென்று ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளார்.

அப்போது, மனைவி பிரியா கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்துக் கொண்டு இருந்துள்ளார். இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த கணவர் பிரகாஷ், இருவரும் ஒன்றாக இருப்பதைத் தனது செல்போனில் படம் எடுத்துக்கொண்டார். பிறகு, அவர்களது வீட்டின் கதவை வெளிப்பக்கமா பூட்டிவிட்டு வந்துவிட்டார்.

வீட்டிற்கு வந்த பிறகு, கடுமையான கோபமும், வெறுப்பும் அடைந்த பிரகாஷ், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு, சின்னத்துரையின் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு, உள்ளே சென்றுள்ளார். அங்கு, படுக்கை அறையில் உல்லாசத்திலிருந்த இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில், இவரும் உயிர் பயத்தில் அலறித் துடித்துள்ளனர். இதனால், இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரகாஷை கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

'காதலர் தினத்தில்' கள்ளக் காதல்!