சேலத்தில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற 3 பேர் கொண்ட கும்பலை, போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் அவரது 2 நண்பர்களான சிவா, பிரதீப் ஆகிய 3 பேரும் சேர்ந்து, குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதற்காக, குறுக்கு வழியில் யோசித்துள்ளனர்.

அதன்படி, சேலம் பகுதியில் உள்ள இளம் பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட இளம் பெண்கள் ஆகியோரை குறிவைத்து, அவர்களிடம் பணம் சம்பாதிப்பதற்கான ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தத் துடித்துள்ளனர்.

ஆனால், அந்த பெண்கள் முடிவெடுப்பதற்குள், அவர்களை ஆபாசமாகப் படம் எடுத்து, அவர்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றுள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள், போலீசாரிடம் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், லோகநாதன் சிவா, பிரதீப் ஆகிய 3 பேருரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். இந்த கைது பின்னணியில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

விசாரணையில், லோகநாதன் அவரது மனைவி உள்ளிட்ட அவரது குடும்பமே, இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றது தெரியவந்தது.

மேலும், இந்த பெண்களை பகடைக் காயாகப் பயன்படுத்தி, சேலத்தை சேர்ந்த சில தொழிலதிபர்களையும், தங்கள் வலையில் விழ வைத்துள்ளதாகவும், அவர்களையும் ஆபாசமாக புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்ததும் தற்போது தெரியவந்துள்ளது. இதுவரை, இந்த மோசடி கும்பலிடம் 6 பெண்கள் சிக்கி பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனால், இன்னம் அதிர்ச்சியடைந்த போலீசார், லோகநாதனின் தந்தை ரகுவை கைது செய்து, தற்போது தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லோகநாதனின் மனைவியையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அத்துடன், இந்த கும்பல் பயன்படுத்திய செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீசார், அதில் உள்ள விபரங்களை சேகரித்து வருவதோடு, விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளனர்.