தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.

827 more people affected by covid19 in tamilnadu

அதன்படி, “தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி” செய்யப்பட்டுள்ளதாக” குறிப்பிட்டார். 

இதில், “தமிழகத்தில் 710 பேர், பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 117 பேர் என, மொத்தம் 827 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக” கூறினார். 

“சென்னையில் இன்று புதிதாக 559 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 12,762 ஆக அதிகரித்துள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.

இதனால், “தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 19,372 ஆக உயர்ந்துள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டார். 

827 more people affected by covid19 in tamilnadu

குறிப்பாக, “கொரோனா வைரஸ் காரணமாகத் தமிழகத்தில் இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளதாகவும்” அமைச்சர் விஜயபாஸ்கர் கவலைத் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் இன்று 639 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், கொரொனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை இதுவரை 10,548 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், “கொரோனா வைரசில் ரத்த செல்களை அழிக்கக்கூடிய வீரியமான வைரசாக உள்ளது” என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கவலைத் தெரிவித்தார்.