விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காத்து கருப்பு எனும் சீரியலில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் தாய் செல்வம் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கியுள்ளார். மேலும் வெள்ளித்திரையிலும் இயக்குனர் SJ.சூர்யா கதாநாயகனாக நடித்த அதிரடி திரைப்படமான நியூட்டனின் மூன்றாம் விதி திரைப்படத்தை தாய் செல்வம் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி சீரியல்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கல்யாணம் முதல் காதல் வரை, மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர், ஈரமான ரோஜாவே 2, பாவம் கணேசன் மற்றும் தாயுமானவன் உள்ளிட்ட சீரியல்களை தாய் செல்வம் இயக்கியுள்ளார். சின்னத்திரையின் முன்னணி இயக்குனராக வலம் வந்த தாயுமானவர் தற்போது திடீரென காலமானார்.

தற்சமயம் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலை இயக்கி வரும் தாய் செல்வம் திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்தது விஜய் தொலைக்காட்சியினரையும் சின்னத் திரையுலகத்தினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இன்று டிசம்பர் 15ஆம் தேதி சென்னையில் மரணமடைந்த சின்னத்திரை இயக்குனர் தாய் செல்வம் அவர்களுக்கு சின்னத்திரையைச் சார்ந்த பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கலாட்டா குழுமம் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் அவர்களின் குடும்பத்தாருக்கும் அவரை சார்ந்தோருக்கும் ஆறுதல்களையும் ஆழ்ந்த இரங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
 

💔 உங்களது படைப்புகள் என்றும் எங்கள் மனதில்..#RIPDirectorThaiSelvam#KaathuKaruppu #Thaayumaanavan #KalyanamMudhalKaadhalVarai #MounaRaagam Season 1#NaamIruvarNamakkuIruvar#PaavamGanesan#EeramaanaRojaave Season 2 pic.twitter.com/CYFDVCHnVK

— Vijay Television (@vijaytelevision) December 15, 2022