நாயகி தொடரிலிருந்து விலகினேனா...வித்யா பிரதீப் விளக்கம் !
By Aravind Selvam | Galatta | July 29, 2020 18:54 PM IST
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடர்களில் ஒன்று நாயகி.600 எபிசோடுகளை தாண்டி சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்றானது நாயகி.விகடன் டெலிவிஸ்டாஸ் இந்த சீரியலை தயாரித்துள்ளனர்.திலீப் ராயன் இந்த தொடரின் ஹீரோவாக நடித்து வந்தார்.
முதலில் விஜயலக்ஷ்மி இந்த சீரியலின் நாயகியாக நடித்துவந்தார்.சில காரணங்களால் வித்யா பிரதீப் இந்த தொடரின் நாயகியாக பின்னர் வந்தார்.அம்பிகா,பாப்ரி கோஷ் என்று ஏராளமான நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த தொடருக்கென்றே தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது.
கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.
சன் டிவியில் சில காரணங்களால் சில தொடர்கள் கைவிடப்பட்டது அதில் நாயகி தொடரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தொடரின் இரண்டாம் சீசன் ஒளிபரப்பு நேற்று தொடங்கியது.இதில் ஹீரோயினாக பிரபல தொகுப்பாளினி நக்ஷத்திரா நடிக்கிறார்.ஹீரோவாக தெய்வமகள் தொடரில் ஹீரோவாக நடித்த கிருஷ்ணா நடிக்கிறார்.முதல் சீசனில் நடித்த அம்பிகா,பாப்ரி கோஷ் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் இந்த சீசனிலும் நடிக்கின்றனர்.
இந்த தொடரின் ஒளிப்பரப்பு நேற்று தொடங்கியது,இதற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்இந்த தொடரில் இருந்து தான் வெளியேறவில்லை தொடர் கைவிடப்பட்டதால் பாதியில் விலகினேன் என்று தொடரின் நாயகியாக நடித்த வித்யா பிரதீப் தெரிவித்துள்ளார்.இவரது இந்த பதிவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Popular Indian actress' latest kissing video goes viral
29/07/2020 06:25 PM
Ajith Kumar to do this after 19 years | Grand Valimai Update!
29/07/2020 05:34 PM