உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 சீசன்கள் வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், 24 மணி நேரமும் பிக்பாஸ் ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகி உள்ளதால் முன்னணி நடிகர் சிலம்பரசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே திடீரென பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வனிதா விஜயகுமார் நேற்று (பிப்ரவரி 23ம் தேதி) வெளியேறினார். 
 
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் தனக்கு எதிராக இருப்பதாகவும் அதனால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக நேரடியாக பிக்பாஸிடம் தெரிவித்துவிட்டு வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறியது குறித்து சமூக வலைதளங்களில் பலவிதமான காரணங்கள், வதந்திகள் பரவி வந்தது. குறிப்பாக  பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வனிதா வெளியேற ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என வதந்திகள் பரவி வந்த நிலையில், வனிதா விஜயகுமார் இதனை மறுத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், எப்படி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து நான் விலகியதையும் ரம்யாகிருஷ்ணனையும் சமந்த படுத்துகிறீர்கள்... எனக்கு மன ரீதியாக ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகவே நான் இந்த முடிவை எடுத்தேன் என்பதோடு சேர்த்து சில காரணங்களை  ட்விட்டரில் தனது பதிலாக விளக்கமளித்துள்ளார் வனிதா. வனிதா விஜயகுமாரின் அந்த ட்விட்டர் பதிவு இதோ…