தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகியாக, தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான த்ரிஷா முன்னதாக, அரவிந்த்சாமி உடன் இணைந்த நடித்த சதுரங்க வேட்டை 2 முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள கர்ஜனை மற்றும் ராங்கி ஆகிய படங்களும் விரைவில் திரைக்கு வரவுள்ளன. 

முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இந்திய சினிமாவின் மிக பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

தொடர்ந்து மலையாளத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லாலுடன் இணைந்து ராம் திரைப்படத்திலும் நடித்து வரும் த்ரிஷா தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் பிருந்தா வெப்சீரிஸ்னில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.  இந்த வரிசையில் அடுத்ததாக திரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் தி ரோட்.

AAA சினிமா தயாரிக்கும் படத்தில் டான்ஸிங் ரோஸ் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ள தி ரோட் படத்திற்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.  இன்று(ஏப்ரல் 25) முதல் தி ரோட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இழப்பதற்கு எதுவும் இல்லாத ஒரு பெண், ரத்த பூமியில் மேற்கொள்ளும் ஆக்ரோஷமான பயணமே தி ரோட் படத்தின் கருவாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. 2000-களில் மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவமே இக்கதையின் அடிப்படையாக அமைந்துள்ளது. மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 50 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.