லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. 

ஐபிஎல் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த தொடரில் நடைபெறும் 37-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றன.

இந்நிலையில் நடப்பு சீசனின் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை அணி முதன் முதலாக களமிறங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடர்ந்து லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

அதனைத்தொடர்ந்து தொடக்க வீரர்களாக கேப்டன் ராகுல் மற்றும் டி காக் களமிறங்கினர். பும்ரா பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து டி காக் 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் மனிஷ் பாண்டே களம் புகுந்தார். அவர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ராகுல் அரைசதம் கடந்தார். பொல்லார்ட் பந்தில் 22 ரன்களில் அவுட்டாகி அவர் மீண்டும் ஒருமுறை லக்னோ ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.

மேலும் அவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோனிஸ் மற்றும் குருனால் பாண்டியா வந்த வேகத்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதனைத்தொடர்ந்து தீபக் ஹூடா-வும் 10 ரன்களில் நடையைக் கட்ட மறுமுனையில் ராகுல் தொடர்ந்து அதிரடி காட்டினார். சிறப்பாக விளையாடிய அவர் 61 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் இது மும்பைக்கு எதிராக அவரது 2-வது சதமாகும்.

இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு ரன்கள் குவித்தது. இதை தொடர்ந்து ரன்கள் எடுதல்வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். ரவி பிஷ்னாய் சுழலில் இஷான் கிஷன் 8 ரன்களில் வெளியேற அவரை தொடர்ந்து வந்த பிரெவிஸ் 3 ரன்களில் அறிமுக வீரர் மொஹ்சின் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து ஒரு முனையில் சிறப்பாக விளையாடிவந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா குருனால் பாண்டியா பந்துவீச்சில் 39 ரன்களில் வெளியேறினார். மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக களம் புகுந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் ஆட்டமிழக்க  ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

ஒரு கட்டத்தில் வெற்றிப்பாதையை நோக்கி சென்ற மும்பை அணி தடுமாற தொடங்கியது. இருப்பினும் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் பொல்லார்ட் - திலக் வர்மா ஈடுபட்டனர். சிறப்பாக விளையாடிவந்த திலக் வர்மா 38 ரன்களில் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். 
இறுதி ஓவரில் மேலும் 3 விக்கெட்கள் சாய மும்பை அணியின் தோல்வி உறுதியானது.

மேலும் இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி  வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு தொடரில் மும்பை அணி 8-வது தோல்வியை சொந்த மைதானத்தில் சந்தித்துள்ளது.