பொன்னியின் செல்வன் படத்திற்கு அடித்தளமாக அமைந்த தளபதி பட பாடல்... உண்மையை உடைத்த தோட்டா தரணி! ட்ரெண்டிங் வீடியோ இதோ

பொன்னியின் செல்வன் - தளபதி பாடல் குறித்து பேசிய தோட்டா தரணி,thotta tharani says the base of ponniyin selvan from thalpathy movie | Galatta

தமிழ்நாட்டின் புகழ்மிக்க எழுத்தாளர்களில் ஒருவரான அமரர் கல்கி அவர்களின் மிகச் சிறந்த வரலாற்றுப் புனைவு நாவலாக உலக அளவில் பல கோடி ரசிகர்களின் மனதை வென்ற பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக செதுக்கியிருக்கிறார்.  முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.  லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இரு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட நாளை ஏப்ரல் 28-ம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்

ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். பிரம்மாண்ட படைப்பாக தயாராகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரம்மிப்பை அதிகரிக்கும் வகையில் தோட்டா தரணி அவர்கள் கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்கள் நம்மோடு பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் இயக்குனர் மணிரத்னம் அவர்களோடு ஆரம்ப கட்டத்தில் தளபதி திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய போது, தளபதி படத்தின் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல் உருவான விதம் குறித்து பேசினார். 

அப்படி பேசுகையில், “அது என்னுடைய ஃபேவரட் பாடல்.. அந்த பாடலுக்கு பணியாற்றும்போது அதற்கான நேரம் எல்லாம் கிடைக்கவில்லை. முதல் நாள் காலையில் பார்த்து அடுத்த நாள் காலையில் படப்பிடிப்பிற்கு சென்றோம்..." என அந்த பாடல் படப்பிடிப்பில் சந்தித்த போராட்டங்கள் குறித்து பேசிய தோட்டா தரணி அவர்களிடம், “ஒரு வரலாற்று ரீதியான ஒரு பாடல் செய்ததில் தொடங்கி இப்போது பொன்னியின் செல்வன் வரை” எனக் கேட்டபோது, “அந்தப் பாட்டில், அந்த சமயத்தில் தான் நாங்கள் நினைத்தோம் பொன்னியின் செல்வன் பண்ண வேண்டும் என்று, அந்தப் பாடலை ஒரு அடித்தளம் மாதிரி தான் நாங்கள் வைத்துக் கொண்டோம். பொன்னியின் செல்வன் பற்றி சாதாரணமாக ஒரு பேச்சு வந்தது... அது செய்தால் இப்படி இருக்க வேண்டும் என பேசி இருந்தோம்... எனவே அதற்கு தகுந்த மாதிரி தான் செய்திருந்தோம்” எனத் தோட்டா தரணி அவர்கள் தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட தோட்டா தரணி அவர்களின் முழு பேட்டி இதோ…
 

விஷால் - SJசூர்யாவின் TIME TRAVEL கேங்ஸ்டர் படம்… பக்கா மாஸாக வந்த மார்க் ஆண்டனி பட அதிரடியான டீசர் இதோ!
சினிமா

விஷால் - SJசூர்யாவின் TIME TRAVEL கேங்ஸ்டர் படம்… பக்கா மாஸாக வந்த மார்க் ஆண்டனி பட அதிரடியான டீசர் இதோ!

மரண மாஸ் நடனமாடி மேடையை அதிரவிட்ட செஃப் தாமு - செஃப் வெங்கடேஷ் பட்... ட்ரெண்டாகும் கலாட்டா டிஜிட்டல் ஸ்டார்ஸ் அவார்ட் வீடியோ இதோ!
சினிமா

மரண மாஸ் நடனமாடி மேடையை அதிரவிட்ட செஃப் தாமு - செஃப் வெங்கடேஷ் பட்... ட்ரெண்டாகும் கலாட்டா டிஜிட்டல் ஸ்டார்ஸ் அவார்ட் வீடியோ இதோ!

ALL SET ரிலீசுக்கு ரெடியான பொன்னியின் செல்வன் 2 படம் குறித்து எமோஷனலான கார்த்தி! வைரலாகும் வீடியோ இதோ
சினிமா

ALL SET ரிலீசுக்கு ரெடியான பொன்னியின் செல்வன் 2 படம் குறித்து எமோஷனலான கார்த்தி! வைரலாகும் வீடியோ இதோ