ARரஹ்மான் சாரின் மேஜிக்!- பொன்னியின் செல்வனில் தேவராளன் ஆட்டம் பாடலின் ரகசியங்கள் பகிர்ந்த இளங்கோ கிருஷ்ணன்! ஸ்பெஷல் வீடியோ

தேவராளன் ஆட்டம் பாடலின் ரகசியங்கள் பகிர்ந்த இளங்கோ கிருஷ்ணன்,Ilango krishnan about devaralan attam song in ponniyin selvan movie | Galatta

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படைப்பான் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. வழக்கமாக மணிரத்தினம் ஏ ஆர் ரஹ்மான் கூட்டணியில் பணியாற்றும் பாடல் ஆசிரியர்கள் இல்லாமல் முதல் முறையாக இந்த கூட்டணியில் இணைந்த இளங்கோ கிருஷ்ணன் பொன்னியின் செல்வன் பாடல்களின் வாயிலாக தமிழ் மக்களின் மனதை வென்றுள்ளார். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் அவர்கள் பொன்னியின் செல்வன் 2 படத்தின் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், நீங்கள் எழுதிய வரிகளோ அல்லது பாடல்களோ இயக்குனர் மணிரத்னம் அவருக்கு மிகவும் பிடித்து உங்களை பாராட்டி இருப்பார்... அது எந்த வரி எந்த பாட்டு? எனக் கேட்டபோது, 

"நிறைய பாராட்டி இருக்கிறார்.. குறிப்பாக அந்த தேவராளன் ஆட்டம் பாடல் பண்ணும் போது என்ன செய்வது என்று மூன்று பேருக்கும் தெரியவில்லை. ஒரு நாள் காலையில் செல்கிறேன், "ஒரு பாடல் செய்ய வேண்டும் இந்த தேவராளன் ஆட்டம் வருகிறதல்லவா அந்த பகுதியை ஒரு பாடலாக்க வேண்டும்." என்றார் மணிரத்னம். நான் மூன்று விதத்தில் எழுதிக் கொடுக்கிறேன் என சொல்லிவிட்டு மரபுக் கவிதைகளின் நடையில் சிறியதாக எழுதிக் கொடுத்தேன். "இதை எப்படி பாடலாக செய்வது, இதை அப்படியே செய்தால் மொக்கையாக இருக்கும்" என்றார். சரி என்ன செய்யலாம் என நான் கேட்டபோது, "மாலையில் ரஹ்மான் அவர்களிடம் போவோம்" என்றார். பின்னர் ரஹ்மான் சாரிடம் சென்றோம் ரஹ்மான் சார் ஒரு வீடியோ போட்டு காண்பித்தார். அந்த வீடியோவில் தான் மங்கி சாண்ட் என சொல்லப்படுகிற பாலியில் இருக்கக்கூடிய மக்கள் ஒரு பாட்டு பண்ணுவார்கள். ஒரு 50 - 100 பேர் வட்டமாக சுற்றி அமர்ந்து கொண்டு ஓ.. ஓ.. ஓ... என சொல்லிக் கொண்டே இருப்பார்கள். "இது மாதிரி வேண்டும்" என்றார் ரஹ்மான் சார். என்ன சார் இது டியூன்னும் இல்லை ஒன்றும் இல்லை எப்படி இதை இப்படியே செய்ய முடியும் என கேட்டேன். அப்போது ரஹ்மான் சார் சில ரிதம் பேட்டன்களை கொடுத்தார். அந்த ரிதம் பேட்டன்களின் மீது தான் இந்த பாடலை செய்தோம். 

அந்தப் பாடல் முடிந்த அன்று இரவு மணிரத்னம் சார் அவ்வளவு சந்தோஷமாக இருந்தார். ரஹ்மான் சார் அதை கம்போஸ் பண்ண கம்போஸ் பண்ணவே பின்னால் திரும்பி திரும்பி என்னை கிண்டல் செய்து கொண்டிருந்தார். "என்னங்க இது பயங்கரமாக இருக்கிறது" என்றார். எனக்கு அவ்வளவு திருப்திகரமாக இருந்தது. ஏனென்றால் காலையில் மூன்று பேருக்குமே என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாது... ஒரு பாடல் வேண்டும் ட்யூன் கொடுங்கள் என கேட்டால், ட்யூனா என்கிறார் ரஹ்மான் சார். "எப்படியாவது ஒரு பாடல் செய்து விட வேண்டும்" என்கிறார் மணிரத்னம் சார். என்ன பண்ணுவது என்று எனக்கும் தெரியவில்லை... ஆனால் ரஹ்மான் சார் உடையது தான் இந்த எல்லா மேஜிக்குமே… ரொம்ப அற்புதமாக நிகழ்ந்தது" என பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட இளங்கோ கிருஷ்ணனின் அந்த முழு பேட்டி இதோ…
 

ALL SET ரிலீசுக்கு ரெடியான பொன்னியின் செல்வன் 2 படம் குறித்து எமோஷனலான கார்த்தி! வைரலாகும் வீடியோ இதோ
சினிமா

ALL SET ரிலீசுக்கு ரெடியான பொன்னியின் செல்வன் 2 படம் குறித்து எமோஷனலான கார்த்தி! வைரலாகும் வீடியோ இதோ

இயக்குனராக களமிறங்கிய லோகேஷ் கனகராஜின் அசோசியேட் இயக்குனர்... சதீஷ் நடிக்கும் முதல் பட அசத்தலான டைட்டில் - மோஷன் போஸ்டர் இதோ!
சினிமா

இயக்குனராக களமிறங்கிய லோகேஷ் கனகராஜின் அசோசியேட் இயக்குனர்... சதீஷ் நடிக்கும் முதல் பட அசத்தலான டைட்டில் - மோஷன் போஸ்டர் இதோ!

தனுஷின் கேப்டன் மில்லர் பட ஷூட்டிங் அனுமதியின்றி நடக்கிறதா?- சர்ச்சைக்குரிய படப்பிடிப்பு பற்றி அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்!
சினிமா

தனுஷின் கேப்டன் மில்லர் பட ஷூட்டிங் அனுமதியின்றி நடக்கிறதா?- சர்ச்சைக்குரிய படப்பிடிப்பு பற்றி அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்!