"ஜிகர்தண்டா XX படம் ஒரு குறிஞ்சி மலர்!"- கார்த்திக் சுப்பராஜ் மற்றும் படக்குழுவினருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு!

கார்த்திக் சுப்பராஜ் ஜிகர்தண்டா XX படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு,rajinikanth appreciates karthik subbaraj and jigarthanda xx team | Galatta

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ சூர்யா இணைந்து முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த நவம்பர் 10 ஆம் தேதி வெளிவந்த ஜிகர்தண்டா XX படத்தை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஜிகர்தண்டா XX படக்குழுவினரை வெகுவாக பாராட்டி இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாராட்டி வழங்கிய அந்த ஸ்பெஷல் அறிக்கையை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தற்போது தனது X பக்கத்தில் பதிவிட்டு தனது நன்றியையும் தெரிவித்திருக்கிறார். அந்த அறிக்கையில்,

ஜிகர்தண்டா XX படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்பராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். 'லாரன்ஸால்' இப்படியும் நடிக்க முடியுமா..? என்ற பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது. '5. J. சூர்யா' இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லதனம், நகைச்சுவை, குணசித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார்.

திருவோட கேமிரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டிற்குரியது. 'திலீப் சுப்ராயனின்' சண்டை காட்சிகள் அபாரம். 'சந்தோஷ் நாராயணன்' வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசை அமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி, தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார்.

இந்த படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்திருக்கு தயாரிப்பாளருக்கு என்னுடைய தனி பாராட்டுகள். ம் படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார்கள். நடிகர்களுடன் போட்டி போட்டு கொண்டு யானைகளும் நடித்து இருக்கின்றன. செட்டானியாக நடித்து இருக்கும் விது அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும், அற்புதம். இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார், பிரமிக்க வைக்கிறார், சிந்திக்க வைக்கிறார், அழவும் வைக்கிறார். I am proud of you கார்த்திக் சுப்புராஜ். My hearty congratulations to கார்த்திக் சுப்புராஜ் And Team.

என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்து இருக்கிறார். இதனை பதிவிட்டு இருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் படத்தில் வரும் ஒரு முக்கிய வசனமான "FOR MY BOY" என்ற வசனத்தை குறிக்கும் வகையில் "தலைவர் "FOR MY BOYS" என சொன்னபோது" குறிப்பிட்டு, "லவ் யூ தலைவா" என பதிவிட்டு இருக்கிறார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பதிவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அந்த பாராட்டு அறிக்கை இதோ... 

 

When Thalaivar said....

"For my boys" ❤️#JigarthandaDoubleX

Love you Thalaivaaa ❤️❤️ pic.twitter.com/bkNtkedlyU

— karthik subbaraj (@karthiksubbaraj) November 14, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகரான இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கடந்த 2019 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த பேட்ட படத்தை இயக்கியிருந்தார். அதன்பிறகு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் படங்கள் நேரடியாக தியேட்டருக்கு வராத நிலையில், தற்போது வந்திருக்கும் இந்த ஜிகர்தண்டா XX மிகப்பெரிய வரவேற்பையும் எக்கச்சக்கமான பாராட்டுகளையும் குவித்து வருகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் திரை பயணத்தில் மேலும் ஒரு மிகச்சிறந்த படமாக ஜிகர்தண்டா XX இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.