‘20க்கும் மேல் படங்கள், வெப் சீரிஸ் என பம்பரமாக சுழன்று வருகிறேன்!’- பெரிய பழுவேட்டைரைராக மிரட்டிய சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் சிறப்பு பேட்டி!

படங்கள் வெப் சீரிஸ் என தொடர்ச்சியாக சரத்குமார் பணியாற்றி வருகிறார்,sarath kumar recent press meet about his cinema journey | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சரத்குமார் அவர்கள், ஹீரோ - வில்லன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கே உரித்தான ஸ்டைலில் மிக சிறப்பாக நடித்து அந்த கதாபாத்திரமாகவே ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருந்தார். முன்னதாக இந்த 2023 ஆம் ஆண்டில் தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் விஜயின் தந்தையாக நடித்த சரத்குமார் அவர்கள், ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ருத்ரன் திரைப்படத்தில் வில்லனாகவும் அசத்தியிருந்தார். தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவர இருக்கும் கஸ்டடி, கௌதம் கார்த்திக் நடித்துள்ள கிரிமினல், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வாவுடன் இணைந்து நிறங்கள் மூன்று உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ள சரத்குமார் தொடர்ந்து பரம்பொருள், தி ஸ்மைல் மேன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 20க்கும் மேல் படங்களில் ஹீரோ,வில்லன் மற்றும் முக்கிய வேடங்களில் சரத்குமார் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் சரத்குமார் அவர்கள்,

“நான் இப்போது பேசுவது பெரிய பழுவேட்டரையர் பேசுவது போல் உள்ளது என்கிறார்கள், மகிழ்ச்சி. நான் எப்போதும் நல்ல தமிழ் தான் பேசி வருகிறேன். கலை உலகத்தில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தேன், ஆனால் இப்போது தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளேன். கலை தான் என் தொழில். 

பத்திரிகை நண்பர்கள் எப்போதும் என்னிடம் உரிமையுடன் எதையும் பரிமாறி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. இப்போதைய தலைமுறைக்கும் நம்மை தெரிய வேண்டுமென நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் பட ப்ரொமோஷனில் நான் கலந்துகொள்ளவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். என்னை அழைத்திருந்தார்கள் ஆனால் நான் சென்னையில் இல்லாததனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. மணிரத்னம் மிகச்சிறந்த பாத்திரம் தந்திருந்தார், இப்போது படம் எல்லோரிடத்திலும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி. பொன்னியின் செல்வன் வாய்ப்பு தந்ததற்கு மணிரத்னத்திற்கு லைகா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் இருவருக்கும் நன்றி. இன்றைய தலைமுறைக்கு என்னை எடுத்து சென்ற வாரிசு படத்திற்காக வம்சி மற்றும் விஜய்க்கு நன்றி. ருத்ரன் வில்லன் பாத்திரம் என்றபோது தயங்கினேன் ஆனால் இப்போதைய ரசிகர்கள் வில்லனாக நடிப்பவர்களை அதே போன்று பார்ப்பதில்லை, அந்த கதாப்பாத்திரத்தை எப்படி செய்துள்ளனர் என்றே பார்க்கிறார்கள். அதனால் தைரியமாக நடித்தேன். அடி வாங்கும் சாதாரண வில்லனாக நடிக்க மாட்டேன். நான் நாயகனாக நடித்த காலத்தை விட இப்போது அதிகப்படம் நடித்து வருகிறேன். வெப் சீரிஸ், படம் என பம்பரமாக சுழன்று வருகிறேன். தொடர்ந்து சினிமாவில் என் பயணம் தொடரும். அரசியல் பற்றி நிறைய கேள்விகள் வருகிறது, விரைவில் அதற்காக தனியாக பத்திரிக்கை நண்பர்களைச் சந்திப்பேன். 2026-ல் ஒரு மாஸான அறிவிப்பு வரும். எப்போதும் உங்கள் ஆதரவு எனக்கு இருந்துள்ளது. அந்த ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி.”  என தெரிவித்துள்ளார்.
 

சினிமா

"முயற்சிகள் தோல்வியடையாது!"- AK62 பட பக்கா மாஸ் டைட்டில் விடாமுயற்சி… அஜித் குமாரின் பிறந்தநாள் ட்ரீட் இதோ!

அழகிய ஆண் குழந்தைக்கு அப்பாவாகிய துணிவு, கேப்டன் மில்லர் பட நடிகர்... குவியும் வாழ்த்துகள்!
சினிமா

அழகிய ஆண் குழந்தைக்கு அப்பாவாகிய துணிவு, கேப்டன் மில்லர் பட நடிகர்... குவியும் வாழ்த்துகள்!

பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 2 பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? அதிரடியான பாக்ஸ் ஆபீஸ் தகவல் இதோ!
சினிமா

பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 2 பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? அதிரடியான பாக்ஸ் ஆபீஸ் தகவல் இதோ!