தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விக்ரம் பிரபு. முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டு (2022) செப்டம்பர் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் ரிலீஸாகவுள்ளது.

தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சௌத்ரி இயக்கத்தில் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனிடையே விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த தமிழ் திரைப்படம் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசானது.

முன்னதாக இயக்குனர் வெற்றிமாறனின் அசுரன், சூர்யாவின் ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகரான தமிழ் இயக்கியுள்ள டாணாக்காரன் திரைப்படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள டாணாக்காரன் படத்தில் நடிகை அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்க லால், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதுவரை யாரும் பெரிதும் அறிந்திடாத காவல்துறை முக்கியமான பகுதியை கதைக்களமாக கொண்ட டாணாக்காரன் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் டாணாக்காரன் திரைப்படத்தை பார்த்த பிறகு நடிகர் விக்ரம் பிரபுவை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து நடிகர் விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விக்ரம் பிரபுவின் அந்த பதிவு இதோ…