“தங்கையை கர்பமாக்கிய அண்ணன்” குழந்தை பெற்றெடுக்க மருத்துவமனைக்கு வந்த 12 வயது சிறுமியால் அதிர்ச்சி!

“தங்கையை கர்பமாக்கிய அண்ணன்” குழந்தை பெற்றெடுக்க மருத்துவமனைக்கு வந்த 12 வயது சிறுமியால் அதிர்ச்சி! - Daily news

12 வயது சொந்த தங்கையை, அண்ணனே பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் அடுத்து உள்ள கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) விவசாயியாக இருந்து வருகிறார்.

இவருக்கு, 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், சரணவனுக்கும் அவரது மனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, அவர்கள் இருவரும் 12 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர். 

இப்படியாக, கணவரிடம் இருந்து பிரிந்த அந்த விவசாயின் மனைவி, தன்னுடைய 2 குழந்தைகளையும் கணவனிடமே விட்டு விட்டு, வேறு ஒருவருடன் சென்று விட்டார் என்றும், கூறப்படுகிறது.

இதையடுத்து, விவசாயி சரணவன் 2 வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

அந்த மனைவிக்கு பெண் குழந்தை பிறந்து, தற்போது 12 வயது ஆகிறார். அந்த சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். 

இந்த நிலையில் தான், கணவன் - மனைவி இருவரும் அவர்களுக்கு சொந்தனமான விவசாய நிலத்திற்கு சென்று, விவசாயத்தை கவனத்து வந்தனர்.

அதே நேரத்தில், கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக, அந்த 12 வயது சிறுமியும் பள்ளிக்கு செல்லாமல், வீட்டிலேயே இருந்து வந்தார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட, முதல் மனைவியின் மகன் அந்த 12 வயது தங்கைக்கு ஆசை வார்த்தைகள் கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். 

இந்த கொடுமை தொடர்ந்த நிலையில், ஒரு கட்டத்தில், இது பற்றி அந்த சிறுமியின் தாய் - தந்தை இருவருக்கும் தெரிய வந்துள்ளது. எனினும், இது தொடர்பாக அவர்களது மகனை திட்டிய நிலையில், மகனுக்கு பிரச்சனை ஆகி விடும் என்று பயந்து, இந்த சம்பவத்தை வெளியே தெரியாமல் அவர்கள் பார்த்துக் கொண்டனர். 

இந்த நிலையில் தான், நிறைமாத அந்த கர்ப்பிணி சிறுமிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. 

இதனையடுத்து, அந்த 12 வயது சிறுமியை அவரது பெற்றோர் பிரசவத்திற்காக நெல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். 

அதன்படி, 12 வயது சிறுமி பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டால், சந்தேகமடைந்த அந்த மருத்துவமனையின் ஊழியர்கள் இது தொடர்பாக நெல்லூர் குழந்தைகள் நல அமைப்பிற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், மருத்துவமனைக்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சிறுமியின் அண்ணனே அந்த 12 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய தெரிய வந்தது. 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தற்போது தலைமறைவாக உள்ள அந்த சிறுமியின் சொந்த அண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment