'ரஜினி சார் LETTER குடுக்கலனா என் மகனுக்கு வாழ்க்கையே இல்ல!'- சூப்பர் ஸ்டாரின் பேருதவி குறித்து பேசிய ராகவா லாரன்ஸின் தாயார்! வைரல் வீடியோ

ரஜினிகாந்த் செய்த உதவி குறித்து பேசிய ராகவா லாரன்ஸின் தாயார்,raghava lawrence mother opens about how rajinikanth helped | Galatta

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடன இயக்குனரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிகராகவும் பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் படமாக தயாரான ருத்ரன் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா 2 ஆகிய திரைப்படங்களில் ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வருகிறார்.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் பிரத்தியேக பேட்டி அளித்த லாரன்ஸ் மாஸ்டர் அவர்களின் தாயார் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்ம ஒரு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், 'ரஜினி சார் LETTER கொடுக்கவில்லை என்றால் என் மகனுக்கு வாழ்க்கையே இல்லை... நாங்கள் CARD வாங்கி கொடுத்தோம் எல்லாம் செய்தோம்.. CARD எடுத்தாலும் அப்போதெல்லாம் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல் சார் இவர்களது சிபாரிசு இருந்தால் தான் உள்ளேயே அனுப்புவார்கள். ஆரம்பத்தில் சூப்பர் சுப்பராயனிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்(லாரன்ஸ்). முதலில் அவர் தான் ரஜினி சார் உடைய படப்பிடிப்பிற்கு அழைத்துச் சென்றார். அப்போது, “யார் இந்த பையன்” என ரஜினி சார் கேட்டபோது, “என்னிடம் வேலை பார்க்கிறான்” என சூப்பர் சுப்பராயன் சொன்னார். “சின்ன பையனாக இருக்கிறான் இவனை போய் வேலைக்கு வைத்திருக்கிறாய்” என ரஜினிகாந்த் கேட்க, “இல்லை இல்லை அவனுக்கு நன்றாக டான்ஸ் தெரியும் இப்போது கூட சும்மா வந்திருக்கிறான். ஒரு நல்ல வழி செய்ய வேண்டும் என்ன சூப்பர் சுப்பராயன் சொல்ல, “அப்படியா ஆடுவாரா நல்லா..” என கேட்ட ரஜினிகாந்த் படப்பிடிப்பின் இடைவெளியின் போது ஒரு பாடல் போட்டு லாரன்ஸை ஆட சொன்னார். அவர் மிக சிறப்பாக ஆடிவிட்டார். ரஜினி சார் கைதட்டினார் வேறு எதுவும் பேசவில்லை. பின்னர் படப்பிடிப்பு முடிந்து போகும்போது “கண்ணா இங்கே வா” என அழைத்து, என் வீட்டிற்கு வந்து விடு நாளைக்கு என சொன்னார். அது வியாழக்கிழமை. அப்போது இவருக்கு ஒன்றும் புரியவில்லை படபடவென்று ஆகிவிட்டது. அப்போது சூப்பர் சுப்பராயன் தட்டிக் கொடுத்து “ஒன்றும் இல்லை வா” என அழைத்து வந்தார். பின்னர் வீட்டுக்கு வந்துவிட்டு, “அம்மா ரஜினி சார் என்னை வீட்டுக்கு அழைத்து விட்டார்” என்றார். இவர் காலையிலேயே அங்கு சென்று விட்டார் அவர் காலை 5 மணிக்கு எல்லாம் ராகவேந்திரர் பூஜை முடித்துவிட்டு மேலே இருந்து கீழே வரும் போதே கடிதத்தோடு வருகிறார். கொண்டு வந்து கொடுத்ததும் ரஜினிகாந்த் சார் காலில் விழுந்து விட்டார்(லாரன்ஸ்). இவருக்கு கை கால் எல்லாம் உதற ஆரம்பித்து விட்டது. இந்த LETTER கொண்டு போய் கொடு என்றார் ரஜினி சார். முதல் முறை இவர் CARD எடுத்துக் கொண்டு சென்ற போது நீ கருப்பாக இருக்கிறாய் வேண்டாம் என அனுப்பி விட்டார்கள். அதன் பிறகு மன வருத்தப்பட்டு பின்னர் சூப்பர் சுப்பராயன் அவர்களிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு இப்படி ஒரு விஷயம் நடந்து, இவர் சொன்னவுடன் நீ எடுத்துக்கொண்டு போனாயா? என ரஜினி சார் கேட்க, எடுத்து சென்ற பிறகு தான் இப்படி சொல்லி விட்டார்கள் நீ கருப்பாக இருக்கிறாய் என்று சொன்னார்கள் என சொன்னதற்கு தான், “நீ வா வீட்டிற்கு” என அழைத்து அவர் LETTER கொடுத்து அனுப்பினார். சந்திரமுகி படம் என்றால் அவருக்கு ரொம்ப பிடிக்கும் திடீரென ஒரு நாள் வந்து சந்திரமுகி 2 திரைப்படத்தை எனக்கு கொடுத்து இருக்கிறார்கள் என அவர் சொன்ன போது, “வாவ்” என சந்தோஷத்தில் கத்திவிட்டேன்" என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட அந்த முழு பேட்டி இதோ…
 

ஹாரிஸ் ஜெயராஜ் உடன் முதல் சந்திப்பு முதல் பாடல் குறித்து அட்டகாசமாக பாடி பதிலளித்த சுமார் ஹாரிஸ்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

ஹாரிஸ் ஜெயராஜ் உடன் முதல் சந்திப்பு முதல் பாடல் குறித்து அட்டகாசமாக பாடி பதிலளித்த சுமார் ஹாரிஸ்! ட்ரெண்டிங் வீடியோ

சந்திரமுகி 2, ஜிகர்தண்டா 2, காஞ்சனா 4 படங்கள் குறித்து பக்கா மாஸ் அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்! விவரம் உள்ளே
சினிமா

சந்திரமுகி 2, ஜிகர்தண்டா 2, காஞ்சனா 4 படங்கள் குறித்து பக்கா மாஸ் அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்! விவரம் உள்ளே

'அஜித் சொல்லி ஷாலினி கேட்ட SORRY!'- இதுவரை வெளிவராத நினைவுகளை பகிர்ந்து கொண்ட பப்லு ப்ரித்வி ராஜ்! வைரல் வீடியோ இதோ
சினிமா

'அஜித் சொல்லி ஷாலினி கேட்ட SORRY!'- இதுவரை வெளிவராத நினைவுகளை பகிர்ந்து கொண்ட பப்லு ப்ரித்வி ராஜ்! வைரல் வீடியோ இதோ