"தளபதி விஜயின் லியோ படம் மாஸா? கிளாஸா?"- தயாரிப்பாளர் SS லலித் குமாரின் பதில் இதுதான்! ட்ரெண்டிங் வீடியோ

தளபதி விஜயின் லியோ படம் மாஸா கிளாஸா என தயாரிப்பாளர் பதில்,producer lalit kumar about leo movie thalapathy vijay | Galatta

தளபதி விஜயின் அடுத்த பிளாக்பஸ்டர் படமாக வர இருக்கும் லியோ திரைப்படம் குறித்து அதன் தயாரிப்பாளர் SS.லலித்குமார் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசி இருக்கிறார். மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகி வரும் படம் தான் லியோ. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 125 நாட்கள் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதற்கான இறுதி கட்டப் பணிகளும் மிரட்டலான VFX பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தளபதி விஜயின் திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் லியோ திரைப்படத்தை உலக அளவில் மிக பிரம்மாண்டமாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஆறு வாரங்களுக்கு முன்பே UKவில் பி எ திரைப்படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் தொடங்கப்பட்ட நிலையில், தொடங்கப்பட்ட 24 மணி நேரத்திலேயே 10, மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டு புதிய சாதனையும் லியோ படம் படைத்தது.

இந்த நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கும் மகாராஜா திரைப்படத்தின் பட விழாவில் கலந்து கொண்ட லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் SS.லலித் குமார் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்படியாக, லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் மற்றும் அப்டேட் குறித்து கேட்டபோது, "அடுத்த வாரத்தில் இருந்து வரிசையாக அப்டேட்கள் வரும் படம் முடியும் வரைக்கும் சரியாக வரும்" என்றார். தொடர்ந்து இசை வெளியீட்டு விழா குறித்து கேட்டபோது, "இசை வெளியீட்டு விழா தமிழ்நாட்டில் தான்" என்றார். தொடர்ந்து அவரிடம் நீங்கள் படம் பார்த்து விட்டீர்களா? என கேட்டபோது, "முதல் பாதி பார்த்துவிட்டேன் மிகவும் அருமையாக இருக்கிறது." என்றார். மேலும் லியோ படம் மாஸாக இருக்குமா கிளாஸாக இருக்குமா? எனக் கேட்டபோது, "எல்லா ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்" என்றார். மேலும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் SS.லலித்குமார் அவர்களின் அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.