"ஹீரோயின்களின் காலகட்டம் இவ்வளவுதான் என்பதை உடைத்தவர்!"- திரிஷா குறித்து மனம் திறந்து பேசிய விஷால்! ஸ்பெஷல் வீடியோ

நடிகை திரிஷா உடனான நட்பு குறித்து பேசிய விஷால்,Mark antony actor vishal opens about trisha in galatta fans festival | Galatta

தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் இன்று செப்டம்பர் 15ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் - எஸ்.ஜே.சூர்யா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. டைம் டிராவல் கேங்ஸ்டர் கான்சப்ட்டில் பக்கா ஆக்சன் என்டர்டைன்மெண்ட் ட்ரீட்டாக மார்க் ஆண்டனி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து இயக்குனராக களமிறங்கும் நடிகர் விஷால் விரைவில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். விரைவில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் தனது 34 வது படமான விஷால் 34 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஏற்கனவே இயக்குனர் ஹரி - விஷால் கூட்டணியில் வெளிவந்த தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் இந்த விஷால் 34 படமும் வெற்றி பெற்று ஹட்ரிக் ஹிட் கொடுக்குமா என எல்லோரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற நடிகர் விஷால் ரசிகர்கள் கொண்டாட்டம் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் அவர்கள் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் தன்னுடன் நடித்த கதாநாயகிகள் குறித்து மனம் திறந்து பேசிய நடிகர் விஷால், தன்னுடைய நீண்ட கால நண்பரும் நடிகைமான திரிஷா அவர்கள் குறித்தும் பேசினார். அப்படி பேசுகையில், த்ரிஷாவின் புகைப்படத்தை காட்டியதும், 

"TRASH! ஐயோ மன்னித்து விடுங்கள் TRASH என நண்பர்களுக்கு மத்தியில் பேசும் அவர்களுடைய பட்டப்பெயரை சொல்லி விட்டேன். திரிஷா.. எனக்கு பல வருடங்களாக தெரியும். எப்படி சொல்வது ஹீரோ தான் திரைத் துறையில் நீடிக்க முடியும் ஹீரோயின்களில் வாழ்க்கை இவ்வளவு காலகட்டம் தான் என இருந்ததை உடைத்த ஒரு கதாநாயகி இப்போது வரைக்கும் அந்த அழகும் ஈர்ப்பு சக்தியும் எல்லாம் இருக்கக்கூடிய ஒரு நடிகை. மிகவும் வெளிப்படையாக பேசக்கூடிய ஒரு நபர். நடிகையாக இல்லாமல் ஒரு நண்பராக அவரிடம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் மிகவும் வெளிப்படையாக பேசக் கூடியவர். மிகவும் உண்மையான நண்பர்.” என்றார். 

தொடர்ந்து நடிகை திரிஷாவுடன் மிகவும் FUNNYயான நினைவுகள் எதையாவது பகிர்ந்து கொள்ள முடியுமா? எனக் கேட்டபோது, "இயக்குனர் திருவின் சமர் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது நாங்கள் எல்லோரும் நான் திரு, வாசுகி, சுனைனா, த்ரிஷா எல்லோரும் வெளியில் போனோம் பேங்க்காக்கில் ஆட்டோவில் போனோம். யோசித்துப் பாருங்கள் இங்கே நாம் ஆட்டோவில் போக முடியுமா? அங்கே ஷேர் ஆட்டோ மாதிரி ஒரு ஆட்டோவில் பயணம் செய்ததை வாழ்க்கையில் மறக்க முடியாது." என பதில் அளித்தார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகர் விஷாலின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.