“நம்ம லேடி சூப்பர் ஸ்டாருக்கு தான்!”- தான் நெய்யும் பட்டுப் புடவையை நயன்தாராவுக்கு கொடுக்க விரும்பும் சரண்யா மோகன்! வைரல் பேட்டி

பட்டுப் புடவையை நயன்தாராவுக்கு கொடுக்க விரும்பும் சரண்யா மோகன்,saranya mohan wants to gift pattu saree to nayanthara | Galatta

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை சரண்யா மோகன். தனது திரை பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் தளபதி விஜயின் காதலுக்கு மரியாதை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை சரண்யா மோகன் தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் நடிகர் ஸ்ரீகாந்தின் ஒரு நாள் ஒரு கனவு படத்திலிருந்து நடிகையாக தமிழ் திரை உலகில் களமிறங்கினார். இதனை அடுத்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான யாரடி நீ மோகினி திரைப்படத்தில் பூஜா என்கிற அனந்தவல்லி என்ற மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்த நடிகை சரண்யா மோகன் அடுத்து வினய் - பாவனா காம்போவில் வந்த ஜெயம் கொண்டான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

அடுத்தடுத்து பஞ்சாமிர்தம் & அ ஆ இ ஈ உள்ளிட்ட படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்த சரண்யா மோகன் விஷ்ணு விஷாலின் முதல் படமான வெண்ணிலா கபடி குழு படத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து ஆதியின் ஈரம், பரத்தின் ஆறுமுகம் உள்ளிட்ட படங்களில் குறிப்பிடப்படும் கதாபாத்திரங்களில் நடித்த நடிகை சரண்யா மோகன், அழகர்சாமியின் குதிரை படத்தில் கதாநாயகியாகவும் வேலாயுதம் படத்தில் தளபதி விஜய்யின் தங்கை கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சரண்யா மோகன் அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு ஓய்வு எடுத்துக் கொண்டார்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு சிறப்பு பேட்டி கொடுத்த நடிகை சரண்யா மோகன் தனது திரைப் பயணம் குறித்து நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். கைத்தறியில் பட்டு சேலை நெய்யும் இடத்தில் நடந்த இந்த பேட்டியின் போது புடவை நெய்வதை செய்து பார்த்த நடிகை சரண்யா மோகனிடம், ஒருவேளை நீங்கள் புடவை நெய்ய கற்றுக்கொண்டு ஒரு நல்ல பட்டுப் புடவை நெய்தால் அதை யாருக்கு பரிசளிப்பீர்கள்? எனக் கேட்டபோது, "நம்ம லேடி சூப்பர் ஸ்டாருக்கு பரிசளிப்பேன்." என்றார் தொடர்ந்து பேசும்போது, கடைசியாக எப்போது அவரிடம் பேசினீர்கள்? எனக் கேட்ட போது, "ரொம்ப நாள் ஆகிவிட்டது ஒரு இரண்டு வருடங்கள் இருக்கும்." என்றார். தொடர்ந்து பேசும்போது இந்த இரண்டு வருடத்தில் நிறைய மாற்றங்கள் நடந்து விட்டன,  உங்களுக்கும் இரண்டு குழந்தைகள் அவருக்கும் இரண்டு குழந்தைகள் என சேம் பின்ச் போட்டுக் கொள்வீர்களா? எனக் கேட்டபோது, "நேரில் பார்க்கும் போது பின்ச் கொடுத்திடலாம்." என்றார். தொடர்ந்து நயன்தாரா அவர்கள் குறித்து பேசிய போது, "எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் எத்தனை வருடங்களாக இன்னமும் லேடி சூப்பர் ஸ்டார் என எல்லா மொழிகளிலும் முன்னணியில் இருக்கிறார். இப்போது கூட ஜவான் படத்தில் ஷாருக்கான் உடன் நடிக்கிறார் என்றால் எல்லாராலும் அப்படி எல்லாம் பண்ண முடியாது.” என பதில் அளித்து இருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை சரண்யா மோகனின் அந்த முழு பேட்டி இதோ…