தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.

இவர்களது சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஜீ தமிழின் முக்கிய தொடர்களில் ஒன்று என்றென்றும் புன்னகை.நக்ஷத்திரா ஸ்ரீனிவாஸ்,தீபக் குமார்,நிதின் ஐயர்,கவிதா,சுஷ்மா நாயர் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த தொடரை பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி தயாரித்து வருகிறார்.ரசிகர்களின் ஆதரவுடன் இந்த தொடர் விரைவில் 500 எபிசோடுகளை கடக்கவுள்ளது.பல விறுவிறுப்பான திருப்படங்களுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரின் நாயகனாக நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்ற தீபக் சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.தற்போது இவருக்கு பதிலாக புது ஹீரோவாக ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி,கோகுலத்தில் சீதை,ரஜினி உள்ளிட்ட தொடர்களில் நடித்த விஷ்ணுகாந்த் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவரது எபிசோடுகள் விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.