மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா !
By Sakthi Priyan | Galatta | July 18, 2020 12:11 PM IST
பாலிவுட்டின் ஜாம்பவானான அமிதாப் பச்சன் சில நாட்கள் முன்பு திடீரென மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் தெரிந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அதற்கு பிறகு அமிதாபுக்கும்,அபிஷேக் பச்சனுக்கும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் அவர்களுக்கு தொற்று இருந்தது உறுதி ஆனது.
அதனை தொடர்ந்து அபிஷேக் பச்சன் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நடிகர் அமிதாப் பச்சனே ட்விட்டரில், தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை தெரிவித்திருந்தார். அதை பார்த்த சினிமா நட்சத்திரங்கள் பலரும் அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுவதாக கமெண்ட் செய்தனர்.
அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய், குழந்தை ஆரத்யா உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கும் முடிவு பாசிட்டிவ் என்று தான் வந்தது. ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யாவை மட்டும் வீட்டில் தனிமை படுத்திக்கொள்ள மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். அதனால் அவர்கள் இருவரும் வீட்டிலேயே இருந்தனர். அமிதாப் குடும்பத்திற்கு சொந்தமான நான்கு பங்களாக்களை அதிகாரிகள் அதற்கு பிறகு சீல் வைத்தனர்.
இந்நிலையில் தற்போது வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யா இருவரும் தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஐஸ்வர்யா ராய்க்கு சில அறிகுறிகள் அதிக ஜுரம் இருந்ததால் உடனே அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவருக்கு அதிக அளவு காய்ச்சல் மற்றும் தொண்டை இன்ஃபெக்ஷன் இருந்ததாக தெரிகிறது. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. மேலும் ஆராத்யாவுக்கும் லேசான காய்ச்சல் இருந்தது என்றும், அது தற்போது சரியாகி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சன் குடும்பம் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியானது அவரது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
மும்பையில் உள்ள கோவில்களில் அமிதாப் பச்சனின் குடும்ப புகைப்படத்தை வைத்து அவர்கள் விரைவில் நலம் பெற பூஜை, யாகம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொல்கத்தாவில் உள்ள ரசிகர்கள் சிலர் அமிதாப் குடும்பம் முழுமையாக குணமாகும் வரை தொடர்ந்து யாகம் நடத்த உள்ளதாக அறிவித்துளள்னர். ஞாயிற்று கிழமை முதல் யாகம் துவங்கி நடைபெற்று வருகிறது என்று கூறி உள்ளனர். கொரோனா பாதித்த இந்த சூழலில் திரைப்பிரபலங்கள் பலருக்கும் தொற்று ஏற்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தருகிறது.
Dirty Hari Movie Official Trailer | Bold Adult Film | Veteran Producer's next!
18/07/2020 12:00 PM
Latest: Aishwarya Rai admitted to hospital for Corona treatment!
18/07/2020 10:56 AM
Vera mari vera mari combo: ''Will you act in my film'' - KV Anand's open request
17/07/2020 07:39 PM