விழுப்புரம் பாஜக மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளர் காயத்திரி, அந்த மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி.கலியவரதன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியா முழுவதும் பல இடங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொட்ச்சியாக அதிகரித்துக் காணப்படுகின்றன. இது போன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் இதுவரை பெரும்பாலும் பாமர மக்களே சிக்கி வந்த நிலையில், தற்போது அதையும் தாண்டி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட தற்போது சிக்கத் தொடங்கித் தொடங்கிவிட்டார்கள்.

அதன் படி, விழுப்புரம் மாவட்ட பாஜக வில், தற்போது பாலியல் குற்றச்சாட்டுப் புயலை கிளப்பி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்ட பாஜக வின் மகளிரணி பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார் காயத்திரி. அங்குள்ள கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக வின் மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளர் காயத்திரி, “விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி. கலியவரதன் மீது பாலியல் புகார், பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பாஜக தலைமைக்கு, பரபரப்பான புகார் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த கடிதம், அந்த கட்சியின் சக உறுப்பினர்கள் மத்தியில் தற்போது புயலைக் கிளப்பி இருக்கிறது. 

அந்த பாலியல் குற்றச்சாட்டுக் கடிதத்தில், “நான் விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளராக உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ள அவர், “எனக்கும் மாவட்ட தலைவி பொறுப்பு வாங்கி தருவதாகக் கூறி, விழுப்புரம் மாவட்ட தலைவர் வி.ஏ.டி. கலியவரதன் 5 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்” என்று குற்றம்சாட்டி உள்ளார். 

மேலும் “என்னை மிரட்டி பல முறை அவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்” என்றும், பகிரங்கமாகக் காயத்திரி குற்றம்சாட்டி உள்ளார். 

அத்துடன், “இந்த பாலியல் பலாத்கார அநியாயங்களை வெளியே சொன்னால், என்னை கொலை செய்து விடுவதாகவும்” தொடர்ச்சியாக என்னை மிரட்டி வருகிறார்” என்றும், கூறியுள்ளார். 

“என்னைப் போன்று பல பெண்களின் வாழ்க்கையில் அவர், தொடர்ச்சியாகச் சீரழித்து உள்ளார் என்றும், இதனால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றும், அந்த கடிதத்தில், அவர் பரபரப்பான குற்றச்சாட்டைக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பாலியல் குற்றச் சாட்டு கடிதமானது, விழுப்புரம் மாவட்ட பாஜகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை பாயலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது தமிழகம் வந்துள்ள அமித்ஷா, டெல்லி திரும்பியதும், இந்த பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.