தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் கார்த்தி இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவான பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம்  கதாநாயகனாக அறிமுகமான கார்த்தி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் ,நான் மகான் அல்ல ,பையா, தீரன், கடைக்குட்டி சிங்கம் ,கைதி என பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக இவர் நடித்த சுல்தான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார் .அதில் ,

"அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்.!

இந்த கொரானா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையாக உள்ளது.! அரசாங்கமும் மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள, ‘மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்தல், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல்' போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி; தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் இதுவே இந்தப் பிறந்தநாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்.!

நன்றி.!!

என்றும் அன்புடன்,

கார்த்தி

என அவர் உடன்பிறவா தம்பிகளாக  மதிக்கும் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

இந்த கடினமான காலகட்டத்தில்  ரசிகர்களின் நலன் கருதி நாட்டின் நலன் கருதி நடிகர் கார்த்தி பதிவு செய்துள்ள இந்த அறிக்கையை  பலரும் பாராட்டுவதோடு இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.