பெண் கன்றுக்குட்டியை கொடூரமான முறையில் 4 பேர் சேர்நது பாலியல் வன்கொடுமை செய்து சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படியான ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள சோபாங்கியில் மலைப்பாங்கான பகுதி ஒன்று உள்ளது. 

அந்த பகுதியில் ஜுபைர், தலிம், வாரிஸ் மற்றும் சுனா ஆகிய 4 நபர்கள் சேர்ந்து, வேலைக்கு எதுவுக்கும் சொல்லாமல் மது போதைக்கு அடியாகி ஊரில் வெட்டியாக சுற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படியான சூழலில் தான், சோபாங்கியில் மலைப்பாங்கான பகுதியில் குறிப்பிட்ட அந்த 4 இளைஞர்களும் ஊர் சுற்றி வந்துள்ளனர். அப்போது, சோபாங்கியில் மலைப்பாங்கான பகுதியில் படுத்திருந்த கன்றுக்குட்டியை அவர்களப் பார்த்து அதன் அருகில் சென்று, அதனை முதலில் சீண்டி உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, அவர்கள் மது போதையில் இருந்ததால், விபரீத ஆசையாக அந்த கன்றுக்குட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய அவர்கள் 4 பேருமாக சேர்ந்து முடிவு செய்து உள்ளனர்.

அப்போது, அந்த கன்றுக்குட்டியை இருவர் பிடித்துக்கொள்ள ஒருவர் மாற்றி ஒருவர் அதனை பாலியல் வன்கொடுமை செய்ய, அதனை ஒருவர் தங்களது செல்போனில் வீடியோ எக்க என்று, அவர்கள் 4 பேரும் அந்த கன்றுக்குட்டியை மிகவும் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.

இதனையடுத்து, இந்த கொடூர செயலை, அவர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், இந்த வீடியோ இன்னும் வைரலாகி பல்வேறு தரப்பினரையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்த வீடியோ பெரிய அளவில் அங்கு வைரலான நிலையில், இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அங்குள்ள அல்வார் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்ற நிலையில், இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை மிககடுமையாகத் தண்டிக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். 

மேலும், இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் அதிரடியாக  கைது செய்தனர்.

மேலும், அந்த 4 பேர் மீதும், “கன்றுக்குட்டியை கொடூரமாக தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்ததாக” அவர்கள்  4 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பெரும் 20 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள்” என்றும், போலீசார் தெரிவித்து உள்ளனர்.

அதே போல், அந்த கன்றுகுட்டிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிக்கை வெளியான பிறகு, சம்மந்தப்பட்ட 4 பேர் மீதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கியமாக, இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று அப்பகுதியில் கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டன. மேலும், அந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இச்சம்வம், அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.