கொரோனா சிகிச்சைக்கு வந்த சிறுமியை, மருத்துவமனை ஊழியர்கள் 61 பேர் சேர்ந்து வலுக்கட்டயமாக பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் தான் இப்படியான ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியயில் ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். அந்த பெண்ணிற்கு இன்னும் 18 வயதுகூட பூர்த்தியாகத நிலையில், அவர் அங்குள்ள ஒரு அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

இப்படியான சூழலில், அந்த தாய்க்கும், அவரது மகளான அந்த சிறுமிக்கும் சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தாயும், அவரு மகளும் அங்குள்ள குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

அப்போது, அந்த மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுமியின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.  

இதனையடுத்து, அந்த சிறுமி மட்டும் தனியாக அந்த அரசு மருத்துவனையில் சிசிக்சை பெற்று வந்து உள்ளார். 

அப்போது, அங்கு பணி புரியும் சுவர்ணகுமாரி என்பவர், சிறுமியின் தந்தையிடம் வந்து “உங்கள் மகளுக்கு ஏற்ப்பட்டுள்ள கொரோனா தொற்றை நாட்டு மருந்து மூலம் குணப்படுத்தி விடலாம்” என்று, கூறியிருக்கிறார்.

இதனை நம்பிய சிறுமியின் தந்தை, தனது மகளை சுவர்ணகுமாரியிடம் ஓப்படைத்திருக்கிறார். 

இதனையடுத்து, அந்த சிறுமியை அழைத்து சென்ற மருத்துவமனை ஊழியர் சுவர்ணகுமாரி, அங்குள்ள விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூர் , ஐதராபாத் போன்ற பல்வேறு இடங்களுக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியில் தொழிலில் ஈடுபடுத்தி இருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியால் எதுவுமே செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் அந்த சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து காணப்பட்டுள்ளது. அதன் பிறகு, அந்த கும்பலிடம் இருந்து எப்படியோ தப்பித்த அந்த சிறுமி, குண்டூரில் உள்ள தனது தந்தையிடம் தனக்கு நடந்த இந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறித்து கூறி அழுதிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை,  குண்டூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியில் தொழிலில் தள்ளிய சுவர்ணகுமாரி உட்பட அந்த மருத்துவமனை ஊழியர்கள் 21 பேரை அதிரடியாக முதலில் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை 6 மாதம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், அதன் பிறகு “இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று, நீதிபதி உத்தரவிட்டார்.

அதன் தொடர்ச்சியாகவே, சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஆந்திர மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 61 போரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம், அந்த மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.