“பள்ளிகள் வரும் 16 ஆம் தேதி முதல் திறக்கப்படலாமா?” என்பது குறித்து இன்று தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. 

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் யாவும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், 9 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. தமிழக அரசின் இந்த உத்தரவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு வரும் 16 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளிகளைத் திறக்கலாமா? என்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாணவ - மாணவிகளின் பெற்றோரிடம் கருத்துக் கேட்கப்படும் என்றும், அதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. 

அதன் படி, தமிழகம் முழுவதும் உள்ள 9 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் சம்பந்தப்பட்ட மாணவ - மாணவிகளின் பெற்றோரிடம் காலை முதலே இன்று கருத்துகள் கேட்கப்பட வருகின்றன. அரசின் இந்த கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என்றும், கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பி இருந்தது. 

அத்துடன், பெற்றோரிடம் இருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு அடுத்தகட்ட முடிவை எடுக்க உள்ளது. 

மேலும், தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளில் இந்த கருத்துகள் கேட்கப்பட உள்ளன. சில தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கருத்துகளைக் கேட்டு வருவதாகத் தகவல்கள் வெளியானது. பள்ளிக்கு நேரடியாக வர முடியாத பெற்றோர்கள் தங்களுடைய கருத்துகளை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று அரசு தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன் படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பெரும்பாலான பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் தற்போது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் இந்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. 

பெற்றோர்களின் இந்த கருத்துக்கள் யாவும், உயர் மட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள பள்ளிகள் வரும் 16 ஆம் தேதி முதல் திறக்கப்படுமா? அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் திறக்கப்படுமா என்ற குழப்பமும் சந்தேகமும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.