பெற்ற மகளை 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஜெய்சங்கர், தனது மனைவி உடன் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 

இப்படியான சூழ்நிலையில், ஜெய்சங்கருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால், கணவன் - இருவரும் நிம்மதி இல்லாமல் இருந்து உள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல், கணவன் - மனைவிக்குள் சண்டை பெரிதானதால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இனியும் கணவனோடு சேர்ந்து வாழ முடியாது என்று எண்ணிய அவரது மனைவி, தனது மகனை அழைத்துக் கொண்டு தனியாகச் சென்று விட்டார். 

இதன் காரணமாக, அவரது 17 வயது மகள் மட்டும் தந்தை உடன் வசித்து வந்தார். 

இப்படியான சூழ்நிலையில் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

அதாவது, தனது தயாரைச் சந்தித்த 17 வயதான மகள், “தந்தை ஜெய்சங்கர் என்னை கடந்த 4 ஆண்டுகளாக, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகக் கூறியதாக” கூறப்படுகிறது.

அதனைக் கேட்டு, கடும் அதிர்ச்சியடைந்த அவரது தாயார், அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவன் ஜெய்சங்கர் மீது புகார் அளித்தார். 

இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் தந்தையான ஜெய்சங்கரைக் அதிரடியாகக் கைது செய்தனர்.

இதனையடுத்து, தீவிர விசாரணைக்குப் பிறகு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் அவரை போலீசார் முன்னிறுத்தினர். இது தொடர்பான வழக்கு, அந்த நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அதன் படி, மகளையே பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறைத் தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அத்துடன், “17 வயது சிறுமியைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக மேலும் 7 ஆண்டு சிறைத் தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

ஆக மொத்தமாக 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சத்யா தீர்ப்பு அளித்தார். 

மேலும், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, ஜெய்சங்கர் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.