“கொரோனா தடுப்பூசியால் ஆணுக்கோ, பெண்ணுக்கோ மலட்டுத்தன்மை வரும் என்பதற்கு எந்த விதமான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதும் கிடையாது” என்று, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோயாமல் உலகமே முழுமையாக பாதிக்கப்பட்டு, அதற்கு மருந்து கண்டுப்பிடிக்கும் பணிகளில் கடந்த ஆண்டு முழு வீச்சில் நடைபெற்று வந்ததின் தொடர்ச்சியாக, பல உலக நாடுகளும் புதிய புதிய தடுப்பூசிகளை கண்டுப்பிடித்து பொது மக்களுக்கு செலுத்தி வருகின்றன.

அத்தடன், இந்த கொரோனா தடுப்பூசிகள் பொது மக்களுக்கு போடப்பட்டு வரும் அதே வேளையில், அந்த ஊசி தொடர்பான வதந்திகளும், எதிர் மறையான கருத்துக்களும் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இப்படியான சூழலில் தான், இந்தியா உட்பட பல உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி திட்டம் நாளுக்கு நாள் வேகம் எடுத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது “இந்த கொரோனா தடுப்பூசியால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பக்க விளைவாக மலட்டுத்தன்மை வருமா?” என்கிற மிகப் பெரிய கேள்வியும், ஐயப்பாடும் தற்போது எழுந்து உள்ளது.

அத்துடன், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள், இந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாமா?” என்கிற சந்தேகமும் கடந்த சில மாதங்களாக எழுந்து உள்ளன.

அந்த வகையில், “கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை வருமா?” என்கிற கேள்விக்கு, மத்திய சுகாதார அமைச்சகம் தனது உறுதியான மற்றும் தெளிவான பதிலை அளித்து உள்ளது. 

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “ இந்தியாவில் நடைமுறையில் இருந்து வருகிற எந்தவொரு தடுப்பூசியும், ஆண்களுக்கோ - பெண்களுக்கோ கருவுறுதலில் பாதிப்பை ஒரு போதும் ஏற்படுத்தாது” என்று, உறுதிப்பட கூறியுள்ளது.

முக்கியமாக, “கொரோனா தொற்று நோய்காக போடப்படும் தடுப்பூசி காரணமாக, பலருக்கும் மலட்டுதன்மை நேரலாம் என்கிற வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கிற விதமாக, மத்திய அரசு உறுதியாக கூறியுள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தடுப்பூசி ஆண்கள் மற்றும் பெண்களில் மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை” என்று கூறி உள்ளது. தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, பயனுள்ளவை எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே போல், சமீபத்தில் கோவிட்-19 நோய்த் தடுப்பு தேசிய தொழில் நுட்ப ஆலோசனைக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா அளித்த ஒரு பேட்டியில்,
இது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருந்தார்.

அதில், “போலியோ தடுப்பு மருந்து இந்தியாவில் வழங்கும் போது, இப்படியான அச்சங்களையும், குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது” என்று,
குறிப்பிட்டிருந்தார்.

அதாவது, “ 'இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்கிற குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் மலட்டுத்தன்மை வரலாம்' என்று கூறப்பட்டது என்றும், ஆனால் எல்லா தடுப்பூசிகளும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு தீவிரமாக உட்படுத்தப்பட்டு வருகின்றன” என்றும், அவர் தெளிப்படுத்தினார்.

அத்துடன், “இது போன்ற பக்க விளைவு எந்த தடுப்பூசியிலும் கிடையாது என்றும், கொரோனா தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழு, பாலூட்டும் அனைத்து தாய்மார்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள பரிந்துரை செய்துள்ளது” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார். 

குறிப்பாக, “தடுப்பூசி போடுவதற்கு முன்போ, ஊசி போட்ட பிறகோ குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதை நிறுத்த தேவையில்லை என்றும், தடுப்பூசி பாதுகாப்பானது” என்றும், சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.