31 வயது பெண், மகன் வயதுள்ள  17 வயது சிறுவனுடன் கள்ளக் காதலில் ஈடுபட்டதைக் கணவன் தட்டிக்கேட்டதால், பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்துள்ள வெள்ளாம்பெரம்பூரைச் சேர்ந்த 35 வயதான சிவகுமார் - 31 வயதான ஆனந்தி தம்பதிக்கு, 12 வயதில் ஒரு பெண் குழந்தையும், 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

31 year old dies after having affair with 17 year old boy

இதனிடையே, சிவகுமார் கூலி வேலைக்குச் சென்றுவிடவே, அப்பகுதியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுவனுடன், ஆனந்திக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது.

இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இப்படியாக இவர்கள் இருவரும், உல்லாசம் அனுபவித்துக்கொண்டு இருந்தபோது, அதை சிவகுமார் நேரில் பார்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, மனைவியை அழைத்து சிவகுமார் கண்டித்துள்ளார். இதனால். கணவன் - மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.

மேலும், இந்த தகவல் சிறுவனின் வீட்டிற்கும் தெரியவரவே, சிறுவனின் பெற்றோர்கள் சிவகுமார் வீட்டிற்கு வந்து, ஆனந்தியைக் கடுமையாகத் திட்டி, அசிங்கப்படுத்தி உள்ளனர்.

31 year old dies after having affair with 17 year old boy

அப்போது வீட்டிற்கு வந்த சிவகுமாருக்கு இந்த தகவல் தெரியவரவே, மீண்டும் மனைவியைக் கடுமையாகத் திட்டியுள்ளார்.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஆனந்தி, இரவில் எல்லோரும் தூங்கிய பிறகு, வீட்டின் பின் பகுதியில் உள்ள தோட்டத்தின் மரத்தில், தூங்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

காலையில் சிவகுமார் எழுந்து, மனைவியைக் காணவில்லை என்று தேடியபோது, மனைவி தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து விரைந்த வந்த நடுக்காவேரி போலீசார், ஆனந்தியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ஆனந்தியிடம் கள்ளத் தொடர்பிலிருந்த 17 வயது சிறுவன் மீதும், அவனது பெற்றோர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, 31 வயது பெண், மகன் வயதுள்ள  17 வயது சிறுவனுடன் கள்ளக் காதலில் ஈடுபட்ட சம்பவம் வெளியே தெரிந்ததாலும், கணவன் தட்டிக்கேட்டதாலும், பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.