8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்து ஊழியர் போக்சோவில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியைச் சேர்ந்த 58 வயதான குருசாமி, கன்னியாகுமரி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். 

Kanyakumari driver arrested sexual harassment

இதனிடையே குருசாமி வீட்டில் ஒரு குடும்பத்தினர் வாடகைக்குக் குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு 8 வயதில், 4 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவள் இருக்கிறார்.

இந்நிலையில், சிறுமியைத் தனியாக அழைத்து, ஆசை வார்த்தைகள் கூறி, சிறுமியிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பின்னர், சிறுமிக்குப் பிடித்த தின் பண்டங்களையெல்லாம் கொடுத்து, இதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று கெஞ்சியும், மிரட்டியும் அனுப்பி உள்ளார்.

ஆனால், சிறுமி வீடு திரும்பியதும், இதனைத் தனது பெற்றோரிடம் கூறவே, அதிர்ச்சியடைந்த அவர்கள், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குருசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில்  அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஒருவர் ஈடுபட்ட சம்பவம், கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.