கோவை மாவட்டத்தில்  பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை வேளாண் சட்டங்களின் நன்மை குறித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘’ மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் கொடுத்து அரசியல் செய்கிறது தமிழக அரசு. ஆனால் மோடி அரசு, ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்குளிலும் 6000 ரூபாய் கொடுக்கிறது. 


தினமும் புதிய கட்சிகள் உருவாகிக்கொண்டு இருக்கிறது. நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால், கார் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள், ஒரு நாளுக்கு நான்கு முறை வெள்ளைச் சட்டை மாற்றுபவர்கள், தலைக்கு மேல் லைட் வைத்திருப்பவர்கள் தான் உங்களுக்கு அரசியல்வாதியாக வாய்ப்பார்கள்.  ஆமைக்கறி எக்ஸ்பர்ட் ஒருவர் இருக்கிறார். அவர் எது சொன்னாலும் நம்பாதீர்கள். கமல்ஹாசன் போன்றவர்களையும் மக்கள் நம்பக் கூடாது. காங்கிரஸ் கட்சியில் தொண்டர்களை விட தலைவர்கள் அதிகம். 


பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது மிகவும் பாசம் வைத்துள்ளார். அவர் தமிழகத்துக்கு வந்தால் வேட்டிதான் கட்டுவார். உலகம் பயணம் செல்லும் போது எல்லாம் தமிழைப் பற்றி தான் மோடி பேசுகிறார். அதனால் மோடிக்கு நமது அன்பை வரும் சட்டமன்ற தேர்தலில் திருப்பிக் காட்ட வேண்டும்.


பா.ஜ.க கட்சியில் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம். 2,000 ரூபாய்க்காக, ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கையை அடமானம் வைத்துவிடாதீர்கள்.  நீங்கள் விலை மதிப்பில்லாதவர்கள். உங்களை விலை கொடுத்து வாங்க முடியாது. 


மத்திய அரசிடம் பணமில்லை. அதனால் தான் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறது. ஆனால் இதனால் மக்கள் பாதிக்கப்பட்டவில்லை. நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். நம்ம கட்சியிடம் இல்லாத பணம் இல்லை. ஆனால், நாங்கள் நேர்மையான வழியில் அதை விவசாயிகளுக்கும் பெண்களுக்கும் பயனுள்ள திட்டங்களை நிறைவேற்ற நினைக்கிறோம்.”  என்றார்.