புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் நடத்தப்படவில்லை என பிரதமர் நரேந்திர மோடி காணொலி வழியாக கேட்டு இருந்தார். மேலும் புதுச்சேரியில் ஆட்சியில் இருப்பவர்கள் ஜனநாயகம் குறித்து போதிப்பதாகவும்  விமர்சித்தார்.


இதற்கு பதிலக்கும் விதமாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ’’  தேர்தல் அதிகாரி நியமனத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தலையீடு இருப்பதால், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்த ரங்கசாமி முதலமைச்சராக இருந்தபோதே, உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை. புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாதது குறித்து பிரதமருடன் நேரடியா விவாதிக்கத் தயாராக உள்ளதாகவும் முதல்வர் நாராயணசாமி கூறினார்.