கேரளாவில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை நள்ளிரவு நேரத்தில், வீடு புகுந்து  பேர் கொண்ட மர்ம கும்பல், மூதாட்டியைக் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம், கோலஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இதைத் தெரிந்துகொண்ட அந்த பகுதியில் வேலைப் பார்த்து வந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் 3 பேர், நள்ளிரவு நேரத்தில், அந்த மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து அந்த 3 பேரும், மிகவும் கூர்மையான ஆயுதங்களால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியைப் பலமாகத் தாக்கி உள்ளனர்.

இதில், மூதாட்டி பலத்த காயம் அடைந்த நிலையில், கொஞ்சமும் இறக்கம் இல்லாத அந்த மிருக கும்பல், மூதாட்டி என்றும் பார்க்காமல், 3 பேரும் மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனால், வலியால் அலறித்துடித்த மூதாட்டியின் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் வந்து கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, அவர்கள் வீட்டிற்குள் நுழைவதற்குள், மற்றொரு வழியில், அந்த 3 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

இதனையடுத்து, வீட்டிற்குள் வந்த அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்த மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, மூதாட்டிக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அங்குள்ள போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், விரைந்த போலீசார் மூதாட்டியிடம் நடந்ததை விசாரித்துள்ளனர். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், மூதாட்டியின் வீட்டிற்குச் சென்று போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து, தப்பி ஓடிய குடிபெயர்ந்த தொழிலாளர்கள் 3 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “அந்த 3 பேரும் மது போதையில், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது” தெரிய வந்தது. அத்துடன், இந்த பாலியல் பலாத்கார சம்பவத்தில், வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்றும், அந்த மூதாட்டி தனிமையில் வசிப்பு எப்படித் தெரியும்? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அந்த மூதாட்டியின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி 3 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கேரளாவில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.