சிறுமியின் தலையை துண்டித்து கொடூர கொலை செய்த இளைஞருக்கு தூக்கு- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சிறுமியின் தலையை துண்டித்து கொடூர கொலை செய்த இளைஞருக்கு தூக்கு- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Daily news

சேலத்தில் 13 வயது சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்து கொடூரமாக படுகொலை செய்த தினேஷ் குமார் என்பவனுக்கு தூக்கு தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 

சமீப காலமாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் மீதும் பாலியல் வன்முறை அதிகரித்த வண்ணம் உள்ளன. இதில் பெரும்பாலும் சிறுமிகள் அதிகமாக பாதிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் அவர்களை கொலையும் செய்கின்றனர் காமக்கொடூரர்கள். பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு என்பது உறுதியற்ற நிலையாகவே இருக்கிறது. மேலும் தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பு  என்பது பெரும் முன்னெடுப்பாக அமைந்துள்ளது.

சேலம் மாவட்டம்  ஆத்தூர் அருகே உள்ள  சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த  நெல்அறுவடை இயந்திர ஓட்டுனர் தினேஷ் குமார் என்பவன் தனது வீட்டிற்கு, பூ கட்டுவதற்கு நூல் கேட்டு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக அங்கு சென்று தினேஷ் குமாரை தடுக்க முயன்ற நிலையில், அவன் தாயை கீழே தள்ளிவிட்டுவிட்டு, சிறுமியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான். பின்னர் தனது தம்பி மற்றும் மனைவியுடன் ஆத்தூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தான்.

இந்நிலையில் சிறுமியின் தாயார் சின்னப்பொண்ணு கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார்  தினேஷ் குமார் மீது போக்சோ, கொலை வழக்கு, தீண்டாமை, வன்கொடுமை உள்ளிட்ட  ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த வழக்கு சேலத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்நிலையில் நேற்று தினேஷ்குமார் குற்றவாளி என உறுதி செய்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற கொடூரன் தினேஷ் குமாருக்கு  மற்றும் ஆயுள் தண்டனை தூக்குத் தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25,000 ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு சிறுமிகளின் மீதும் பெண்களின் மீதும் பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரர்களுக்கு எச்சரிக்கை தீர்ப்பாகவே அமைந்துள்ளது. 
 

Leave a Comment