உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.

.

பள்ளி கல்லூரிகளுக்கு,அலுவலகங்கள் உள்ளிட்டவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ் படங்கள்,சீரியல்கள்,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் மார்ச் 19ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன என்ற அறிவிப்பை FEFSI வெளியிட்டிருந்தனர்.

.

.

இதனால் பலதொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.மேலும் அவர்களுக்கு உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.தற்போது நடிகர் சிவகுமார்,சூர்யா,கார்த்தி மற்றும் குடும்பத்தினர் ரூ.10 லட்சத்தை உதவித்தொகையாக வழங்கியுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Legendary Actor / Orator #Siva Kumar, #Suriya, #Karthi family has donated ₹10 Lakhs to #FEFSI workers who are facing industry shutdown due to Corona Virus Outbreak.

.
— Johnson PRO (@johnsoncinepro) March 23, 2020